Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜன.29, 30}ல் பில்லூர் குடிநீர் விநியோகம் இருக்காது

Print PDF

தினமணி 28.01.2010

ஜன.29, 30}ல் பில்லூர் குடிநீர் விநியோகம் இருக்காது

கோவை, ஜன.27: பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜன.29, 30 ஆகிய இரு தினங்கள் பில்லூர் குடிநீர் விநியோகம் இருக்காது.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட அறிக்கை:

கோவை}திருச்சி (என்எச்}67) சாலையை அகலப்படுத்தும் பணிகளை முன்னிட்டு பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சுத்தநீர் கொணரும் குழாயானது இருகூர் பிரிவு மற்றும் சாந்தி கியர்ஸ் அருகே ஓடை கலக்கும் இடத்திற்கு அருகே சாலையோரம் மாற்றி பதிக்கப்பட்டுள்ளது.

குழாய் இணைப்புப் பணிகள் மற்றும் ஆயிரத்து 500 மி.மி. சுத்த நீர்க் குழாயில் கட்டன் மலை அருகில் உத்தேசிக்கப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகள் ஆகியவை ஜனவரி 28, 29 ஆகிய இரு நாட்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆகையால், இருநாட்களில் குடிநீர் விநியோகம் இருக்காது. பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்ற பின் ஜன.30}ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Thursday, 28 January 2010 10:19