Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

35 ஆண்டுகள் பழமையான பைப் குடிநீர் வினியோகத்தில் தொய்வு : 161 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் திட்டம்

Print PDF

தினமலர் 02.02.2010

35 ஆண்டுகள் பழமையான பைப் குடிநீர் வினியோகத்தில் தொய்வு : 161 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் திட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டத்தில் வினியோகிக் கப்படும் குடிநீர் சப்ளை யில், 35 ஆண்டு கால பழைய பைப் காரணமாக பல இடங்களில் வினி யோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி யில் கூட்டுகுடிநீர் திட்டம் துவங்கியபின் குடிநீர் பிரச்னை முடிவுக்கு வரும் என பொது மக்கள் ஆவலோடு எதிர் பார்த் திருந்தனர். ஆனால் , நகராட்சியில் பல வார்டு களில் குடிநீர் சப்ளை சரிவர வரவில்லை என்ற புகார் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

குடிநீர் சப்ளையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நகராட்சி ஒரு பதிலும் ,குடிநீர் வடிகால் வாரியம் ஒரு பதிலையும் தருவதால் பொது மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் நகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படும் குழாய்கள் பதித்து 35 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டும், குழாய்களில் கசிவும் உள்ளதால் குடிநீர் சரியான முறையில் செல்லாமல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. பற்றா குறைக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டியதில் பல இடங் களில் பழைய குழாய்கள் சேதமடைந் துள்ளன. இதனால் சில பகுதிக ளுக்கு குடிநீர் வராமல் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ளாகின்றன . குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் பிரச்னையை சமாளிக்க 35 ஆண்டுகள் பழமையான குழாய்களை மாற்றி 161 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் புதிய குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய குழாய்கள் அமைக்கும் பணி பெயரளவில் இல்லா மல் விரைந்து செயல்பட்டு குடிநீர் வினியோகத்தை சீராக்கினால்தான் பொது மக்கள் பிரச்னை முடிவுக்கு வரும். இல்லையேல் கோடை காலம் துவங்கி விட்டால் குடிநீர் பிரச்னை மேலும் பெரிதாகி குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டு விடும். கோடை தட்டுப்பாடு ஏற்படும் முன் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:36