தினமலர் 08.02.2010
குடிநீர் இணைப்பு முறைப்படுத்தல்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் முறைகேடாக இணைப்பு வழங்கப்பட்ட 549 குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி உத்தரவு வழங்கும் விழா நடந்தது.
ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடாக 549 குடிநீர் இணைப்புகள் வழங்கப் பட்டது. இவர்கள் தங்களுடைய குடிநீர் இணைப்பை முறைப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி எம்.எல். ஏ. சக்கரபாணியிடம் கோரிக்கை விடுத்தனர். துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இவர்களுக்கு முறையான இணைப்பு எண் வழங்கப் பட்டது.
இதற்கான உத்தரவு வழங்கும் விழா ஒட் டன்சத்திரம் பேரூராட்சியில் நடந்தது. பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயக்கொடி வரவேற்றார். அரசு கொறடா சக்கரபாணி 549 பேருக்கும் குடிநீர் இணைப்பு எண் உத்தரவை வழங்கி பேசினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமராஜ், ஆனந்தன், மயிலாத்தாள், ஜின்னா, சின் னம்மாள், கிட்டான், முருகேசன், நாட்ராயன், சந்திரமோகன், திருமலைசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதீஸ்வரன், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் கண்ணன், முன் னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.