தினமணி 12.02.2010
நாளை சென்னை குடிநீர் வாரிய திறந்தவெளிக் கூட்டம்
சென்னை, பிப். 11: குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய் தொடர்பான பிரச்னைகளை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் திறந்தவெளி கூட்டங்களை சனிக்கிழமை நடத்துகிறது.
தண்டையார்பேட்டை, எம்.சி. சாலை, வியாசர்பாடி, இந்திராநகர், அண்ணாநகர், முகப்பேர், டாக்டர் ரங்கா சாலை, சத்திய மூர்த்தி ரோடு, முத்து கிருஷ்ணன் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சென்னை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்தவெளிக் கூட்டம் நடைபெறும்.
மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.