Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் தொட்டி பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 15.02.2010

குடிநீர் தொட்டி பணிகள் துவக்கம்

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் 64 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்ட பணிகள் துவங்கியது.சங்கராபுரம் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.பேரூராட்சி தலைவர் முனுசாமி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி புதிதாக 3 கிணறு அமைத்து தரும்படி கேட்டிருந்தார். தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 65 லட் சம் ரூபாய் செலவில் சங் கராபுரம் ஏரிக் கரையில் 2 கிணறுகள், சமத்துவபுரம் நரிக்குறவர் காலனியில் ஒரு கிணறும், சங்கராபுரம் மேட்டுத் தெருவில் 2 லட்சம் லிட்டர் கொள் ளளவில் ஒரு மேல் நிலை நீர் தேக்க தொட்டி, நரிக் குறவர் காலனியில் ஒரு மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

சங்கராபுரம் ஏரிக்கரை அருகில் புதிய கிணறு தோண்டும் பணி துவங் கியது. பேருராட்சி தலைவர் முனுசாமி தலைமை தாங்கி பணிகளை துவக்கி வைத்தார். விழுப்புரம் குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் அமல்ராஜ், உதவி செயற்பொறியா ளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் வடிவழகன், பேருராட்சி கவுன்சிலர்கள் தஸ்தகீர்,சேகர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 15 February 2010 06:41