தினமலர் 21.02.2010
குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் : தஞ்சை நகராட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர்: நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறி யிருப்பதாவது:தஞ்சை நகராட்சிக்கு நீண்டகாலமாக குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று நகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளை கண்டறிய நகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மானோஜியப்பா வீதியில் நீண்டகாலமாக குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.