Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியகுளத்தில் குடிநீர் சப்ளைக்கு ஜெனரேட்டர் தேவை

Print PDF

தினமலர் 25.02.2010

பெரியகுளத்தில் குடிநீர் சப்ளைக்கு ஜெனரேட்டர் தேவை

பெரியகுளம் : பெரியகுளம் குழாய்தொட்டி பகுதியில், மின்தடை காலங்களில் குடிநீர் சேகரிப்புக்கு, ஜெனரேட்டர் வாங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் வனத்துறைக்கு உட்பட்ட பேரிஜம்ஏரியிலிருந்து பெரியகுளம் நகராட்சி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து வரும் நீர் சோத்துப்பாறை அணைவழியாக குழாய்தொட்டியில் சேகரமாகிறது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் மின் மோட்டார் மூலம் தென்கரை, வடகரை பகுதிகளிலில் உள்ள தலா 10 லட்சம் கொள்ளளவு உடைய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. மின்தடை ஏற்படும் காலங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்படைகிறது. இதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும்.

 

Last Updated on Thursday, 25 February 2010 07:00