Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

5 இடங்களில் ஆழ்துளை கிணறு: பேரூராட்சி முடிவு

Print PDF

தினமலர் 03.03.2010

5 இடங்களில் ஆழ்துளை கிணறு: பேரூராட்சி முடிவு

ஸ்ரீபெரும்புதூர் :ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் செல்வமேரி அருள்ராஜ் தலைமையில், கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் மதன் ராஜ் முன்னிலை வகித் தார்.பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 15 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்னையை சமாளிக்க 19 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.பேரூராட்சிக்குட்பட்ட குடிநீர் குளமான இளநீர் குளத்தை புராதன நகர மேம்பாடு திட்டத்தின் கீழ் சீரமைப்பது, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து நடைபாதை அமைக்க 19 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்குவது, சிவன்தாங்கல் குளக்கரை, திருமங்கையாழ்வார் குளக்கரை, வீராசாமிபிள்ளை ஏரிக்கரை, இளநீர் குளக்கரை மற்றும் பட்டுநூல் சத்திரம் பகுதியில் தலா, நான்கு லட்சத்து 85 ஆயிரம் செலவில் காரிய மேடை அமைப்பது என்பது உட்பட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர் வரதன் நன்றி கூறினார

Last Updated on Wednesday, 03 March 2010 06:54