Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டூர் அணை: குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு

Print PDF

தினமணி 10.03.2010

மேட்டூர் அணை: குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு

மேட்டூர், மார்ச் 9: மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு விநாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் பாசனக் கால்வாய் பகுதியில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,900 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் இது விநாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.12 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,540 கன அடிவீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நீர் இருப்பு 36.34 டி.எம்.சி யாக இருந்தது.

Last Updated on Wednesday, 10 March 2010 09:24