Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி குடிநீர் பைப் லைன் சீரமைப்பு : கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Print PDF

தினமலர் 11.03.2010

நகராட்சி குடிநீர் பைப் லைன் சீரமைப்பு : கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பைப் லைன் சீரமைக்கும் பணியை கலெக்டர் பார் வையிட்டார்.

விழுப்புரம் நகர மக்களுக்கு நகராட்சி சார்பில் எல்லிஸ் சத்திரம் அணைக் கட்டு பகுதியில் போர் வெல் அமைத்து பைப் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. கடந்த 7ம் தேதி எல்லிஸ் பம்ப் ஹவுசிலிருந்து வரும் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் நகருக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப் பட்டது. நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் பைப் லைனில் தற்காலிகமாக சிமென்ட் வைத்து அடைத்து சீரமைத்தனர். பின் தண்ணீரை பம்ப் செய்த போது மீண்டும் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட் டது. குழாய் உடைப்பு ஏற் பட்ட இடத்தை பார்வையிட்ட நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற் கொள்ளுமாறு நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கலெக்டர் பழனிசாமி நேற்று காலை பைப்லைன் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டார். பிரச்னை குறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் அமல்ராஜ், ராஜகுமாரன் ஆகியோர் கலெக்டரிடம் விளக்கினர். பழுதடைந்த குழாய்ககளை சீரமைத்து குடிநீர் சப்ளை வழங்கிட துரித நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி கமிஷனரிடம் கலெக்டர் கூறினார். குடிநீர் குழாய் பழுது நீக்கப்பட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் குடிநீர் சப்ளை துவங்கியது.

Last Updated on Thursday, 11 March 2010 06:53