தினமணி 11.03.2010
பெரியôற்றிலிருந்து குடிநீருக்கôக மôற்றுப் பôதை அமைக்கும் பணி தீவிரம்
கம்பம், மார்ச் 10: தேனி மாவட்டத்தில் பெரியாற்றிலிருந்து குடிநீருக்காக மாற்றுப் பாதை அமைக்கும் பணியில் கூடலூர் நகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கம்பம், கூடலூர் நகராட்சிகளுக்கும், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, தேவாரம், உத்தமபாளையம், பண்ணைபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்பட ஏராளமான ஊராட்சிகளுக்கும் லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.
பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் பகுதியான லோயர்கேம்பில் குடிநீர் வாரியத்தின் கீழ் தனித் தொட்டிகள் அமைத்து தண்ணீரை சுத்தப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரியாறு அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் குடிநீருக்காக விநாடிக்கு 20 கன அடி தண்ணீர் மட்டும் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் குடிநீர் வாரிய சுத்திகரிப்புத் தொட்டிகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து லோயர் கேம்பில் பெரியாற்றை மறைத்து ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு கரை அமைத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீரை மாற்றி விடும் பணியில் கூடலூர் நகராட்சித் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் தலைமையில், நகராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.