Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி 17.03.2010

கோபியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோபி, மார்ச் 16: கோபி நகராட்சிப் பகுதியில் ஒரு வாரத்திற்கு குடிநீர் சப்ளை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

÷கோபி நகராட்சிப் பகுதியில் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கோபி பார்க் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் நிலத்தடி குடிநீர் குழாய்கள், பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணிகள் மார்ச் 17-ம் தேதி முதல் துவங்குகிறது.

÷எனவே, பார்க் தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மார்ச் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டப் பகுதிகளுக்கு கோபி நகராட்சி மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

÷எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை கோபி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.