தினமலர் 18.03.2010
திண்டுக்கல்லுக்கு பேரணை நீர் நகராட்சி நிர்வாகம் புது முயற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் குடிநீர் சப்ளைக்கு பேரணையில் இருந்து குடிநீர் எடுக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இறங்கி உள்ளது.திண்டுக்கல் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்ய பேரணையில் 1982ம் ஆண்டு ஏழு கிணறுகள் தோண்டப் பட்டன. இங்கிருந்து குடிநீர் பம்ப் செய்யப்பட்டு, நிலக் கோட்டையிலுள்ள தொட் டிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து மீண்டும் பம்பிங் செய்யப்பட்டு குட்டியபட்டி கொண்டு வந்து திண்டுக்கல்லுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இத்திட்டத்திற்காக 42 கி.மீ., தூரம் சிமென்ட் குழாய் அமைக்கப்பட்டுள் ளன.பேரணை திட்டம் சில மாதங்கள் மட்டும் செயல் படுவதால் முழுமையாக நம்ப முடியவில்லை.கடந்த இரண்டு ஆண்டாக முழுமையாக செயல்படாத பேரணை திட்டத்தில் தற்போது ஐந்து கிணறுகளில் நல்ல நீர் ஊற்று உள்ளது. தற்போது திண்டுக்கல் லுக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. கோடை யை சமாளிக்க இத்திட்டத் தை பயன்படுத்த நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தற்போது 75 எச்.பி., பம்ப் மூலம் குடிநீர் பம்பிங் செய்கின்றனர்.இதனால் பல மாதங்கள் பம் பிங் இல்லாமல் காய்ந்து கிடந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பை சரி செய் யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.உடைப்பு சரி செய்யப் பட்ட பின்னர் பேரணை நீர் திண்டுக்கல்லுக்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.