Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்ப் பற்றாக்குறை பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 18.03.2010

குடிநீர்ப் பற்றாக்குறை பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

கோவை, மார்ச் 17: குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று, கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை விடுத்த செய்தி:

÷கோவை மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் கோடைக்காலத்தில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான புதன்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

÷மின்தடை, குழாய் உடைப்பு, குடிநீர்க் கசிவு உள்பட பல்வேறு பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்யவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சிறுவாணி அணையில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

÷பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் மேயர்.

Last Updated on Thursday, 18 March 2010 11:32