தினமணி 19.03.2010
ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து அதிக குடிநீர் எடுக்க யோசனை
விருதுநகர், மார்ச் 18: விருதுநகரில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இங்குள்ள ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து தினசரி அதிக அளவு தண்ணீரை நகருக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நகர் நல அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் எஸ்.எம். ரத்தினவேல், மேனகைக் கண்ணன் மற்றுóம் பல்வேறு தரப்பினர், இரு தினங்களுக்கு முன்பு ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
பினனர் மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யனை நகர் நல அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து, இது குறித்து மனு அளித்தனர். அதில் ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து தினசரி சுமார் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற முடியும். தற்போது அங்கிருந்து 2 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து வரப்படுகிறது.
விருதுநகர் மக்களின் தேவையைச் சமாளிக்கும் விதத்தில் ஒண்டிப்புலியிலிருந்து கூடுதல் தண்ணீர் எடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.