தினமலர் 29.03.2010
துறையூரில் குடிநீர் கட்
துறையூர்:துறையூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் நாளை (30ம் தேதி) முதல் நான்கு நாட்களுக்கு விநியோகம் இருக்காது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: முசிறி அய்யம்பாளையம் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தெப்ப திருவிழா நாளை முதல் வரும் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் வழக்கம்போல் மேற்கண்ட நாட்களில் காவிரி குடிநீர் விநியோகம் துறையூர் நகராட்சி பகுதியில் இருக்காது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.