தினமலர் 01.04.2010
திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் குறைப்பு
திருப்பத்தூர்:திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள் ளது.திருப்பத்தூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகை செலுத்தினால் தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில், ஏழைகள் 5 ஆயிரம் ரூபாயை கட்ட முடியாமல் தவித்தனர். சிலர் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு எடுத்து வந்தனர். இதனால் வைப்பு தொகையை குறைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. அதேபோல் குடிநீர் இணைப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் பட்டது. இதனையும் குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் சேர்மன் சொக்கம்மாள், முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் நகராட்சியில் மாத குடிநீர் கட்டணத்தை 75 ரூபாயிருந்து 40 ரூபாயாக குறைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.
மேலும் புதிய குடிநீர் இணைப்பு வைப்பு தொகை 5 ஆயிரம் ரூபாயை, ஆயிரம் ரூபாயாக குறைப்பதாகவும் தீர்மானம் கொண்டுவந்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு களுக்கு செலுத்தப்பட்ட வைப்பு தொகையில் மாற்றம் இல்லை எனவும் கட்டண குறைப்பு இன்று (1ம் தேதி) முதல் அமலுக்கு வருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.இதன்படி அதிரடியாக வைப்பு கட்டணம் 4 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதும், மாத குடிநீர் கட்டணம் 35 ரூபாய் குறைத்துள்ளதும் பொது மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.