தினமலர் 07.04.2010
குடிநீர் சப்ளை நிறுத்தம் மாநகராட்சி அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கமிஷனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டுப்பாளையம் துணை மின் நிலைய பகுதியில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், மேட்டுப்பாளையம் தலைமை நீர் நிலையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் தடை படும். எனவே, குடிநீர் இறைப்பு பணி இருக்காது என்பதால், மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் இன்று ஒரு நாள் தடைபடும். பொதுமக்கள் குடிநீரை முன்னதாக சேமித்து வைத்திருந்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.