தினமலர் 12.04.2010
மீறுசமுத்திரம் கண்மாய் தண்ணீர் இனி குடிநீருக்கு
தேனி : தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் ஆறு அடி தண்ணீரை இனிமேல் குடிநீருக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனி உழவர்சந்தை அருகே உள்ள மீறு சமுத்திரம் கண்மாயில் நீர் தேங்கினால் நகர் பகுதியில் நிலத் தடி நீர் மட்டமும் உயரும். இந்த கண்மாயில் மீன்பிடிக்க கூடாது என கலெக் டர் தடை விதித்துள்ளார். தற்போது எப்போதும் மீறு சமுத்திரம் கண்மாயில் ஆறு அடி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு கரைகளையும், நீர் வழிந் தோடியினையும் உயர்த் திக்கட்ட பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேங்கி நிற்கும் ஆறு அடி தண்ணீரும் குடிநீருக்கு மட்டும் பயன்படுத்தப்படும். கரையோரங்களில் போர்வெல் அமைத்து அடிநீர் தொட்டி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு அடிக்கு மேல் உள்ள தண்ணீர் மட்டுமே பாசனத் திற்கு பயன்படுத்த முடியும். இத்திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் இறங்கியுள்ளனர