தினமலர் 15.04.2010
மூடப்பட்ட கிணறு சீரமைத்து குடிநீர் தொட்டிகள் திறப்பு
திருவண்ணாமலை: தி.மலை கோயில் அருகே மூடப்பட்ட கிணறு தூர் வாரப்பட்டு, குடிநீர் தொட்டிகள் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே தென்மாட வீதியில் உள்ள கிணறு, குப்பை மேடாக மாறி, நீண்ட காலமாக மூடப்பட்டு கிடந்தது. இதனால் அந்த இடத்தில் கிணறு இருப்பதே பலருக்கும் தெரியாமல் போனது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி சார்பில் இந்த கிணறு தூர் வாரி மராமத்து செய்து, மின்மோட்டார் பம்ப் அமைக்கப்பட்டது. மேலும், சுற்றிலும் கட்டடம் கட்டி 2 தொட்டிகள் கட்டப்பட்டன. இதன் மூலம், பொதுமக்கள் குடிநீர் வசதி பெறும் வகையில் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் நேற்று திறந்து வைத்தார். துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். நகராட்சி இன்ஜினியர் சந்திரன், கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர