தினமலர் 16.04.2010
ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வு
தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஸ்வரண் சிங் ஆய்வு செய்தார். பென்னாகரம் அடுத்த மடத்தில் கட்டப்பட்டு வரும் பிரதான நீர் சேகரிப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ஒகேனக்கல்லில் தலைமை பணியிடத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த அவர், திட்ட பணிகளை விரைந்து முடிக்க கேட்டு கொண்டார். திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர் டபிள்யூ கிளார்க், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தலைமை பொறியாளர் வெங்கடேசன், மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் இக்ரம் முகமதுஷா ஆகியோர் உடன் இருந்தனர்.