தினமலர் 17.04.2010
பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் திறப்பு
புதுக்கோட்டை : புதுகையில் எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்ட 2 தண்ணீர் தொட்டிகளை எம்எல்ஏ நெடுஞ்செழியன் திறந்து வைத்தார்.புதுகை நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் பொதுமக்களின் வசதிக்காக 15 தண்ணீர் தொட்டிகள் கட்டுவதற்கு புதுகை சட்டசபை உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ. 1.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுகை நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 15ம் வார்டுகளில் மின்மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டியை எம்எல்ஏ நெடுஞ்செழியன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புதுகை நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், அதிமுக நகர செயலாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக் தொண்டைமான், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ராமநாதன், 12வது வார்டு கவுன்சிலர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர