தினமலர் 21.04.2010
ரூ.20 லட்சத்தில் குடிநீர்திட்ட பணிகள்
நிலக்கோட்டை:நிலக்கோட்டையில் 20 லட்ச ரூபாயில் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருவதாக பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சக்திவேல் வரவேற்றார். கூட் டத்தில் குடிநீர் பற்றாக் குறை குறித்து விவாதிக்கப் பட்டது. துணை தலைவர் உதயகுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய செயல் அலுவலரிடம் மனு கொடுத்தேன். இது வரை நடவடிக்கை இல்லை என்றார். 11வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் உட்பட சில கவுன்சிலர்கள் குடிநீர் பற்றாக் குறை குறித்து முறையிட்டனர். இதற்கு தலைவர் வேல்முருகன் பேரூராட்சி பகுதிகளில் பத்து இடங்களில் 20 லட்ச ரூபாய் மதிப்பில், பேரூராட்சி பொது நிதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். தலைமை எழுத்தர் யூஜின் நன்றி கூறினார்.