Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் வடிவமைப்பு ரூ.25.45 கோடி மதிப்பில் நிறைவேற்ற முடிவு

Print PDF

தினமலர் 24.04.2010

கரூர் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் வடிவமைப்பு ரூ.25.45 கோடி மதிப்பில் நிறைவேற்ற முடிவு

கரூர்: கரூர் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25.45 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கு திட்டம் குறித்து விளக்கும் கூட்டம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. கரூர் நகராட்சியின் தற்போதைய குடிநீர் திட்டம் காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு இயங்குகிறது. பெருகிவரும் மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் தண்ணீர் தேவைப்படும் நிலையில், விரிவான குடிநீர் திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி நிர்வாக ஆணையம் மூலம் ஃபிஷ்னர் இந்தியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. திட்டத்தின் கீழ் நெரூர் காவிரியில் ஏற்கனவே உள்ள நீர் சேகரிப்பு கிணறு மற்றும் புதிதாக கட்டப்பட்ட நீர் உறிஞ்சு கிணறுகளுக்கு இடை÷ ய ஆறு மீட்டர் விட்டம், 21.65 மீட்டர் ஆழத்தில் புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்படுகிறது. புதிய மற்றும் பயன்பாட்டில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் 80 குதிரை திறன் டர்பைன் மின் இறைப்பான் பொருத்தி புதிய தலைமை பணியிடத்தில் இருந்து நகராட்சியின் எல்லையருகில் வாங்கல் சாலையில் உள்ள நீர் உந்து நிலையம் வரை கொண்டுவரப்படுகிறது. வாங்கலில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தரைமட்ட தொட்டிக்கு அருகில் புதிதாக மின் இறைப்பான் அறையுடன் தரைமட்டத்தொட்டி கட்டப்பட்டு இரண்டும் இணைக்கப்படுகிறது. பழைய தரைமட்ட தொட்டியில் இருந்து நகராட்சியின் கிழக்கு பகுதியில் உள்ள நான்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும், புதிய தொட்டியில் இருந்து பிறபகுதியில் உள்ள எட்டு மேல்நிலை தொட்டிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

சீரான குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புக்காக 12 குடிநீர் விநியோக பகிர்மான பகுதியாக பிரிக்கப்பட்டு. மொத்தம் 79.29 கி.மீ., நீளமுள்ள பகிர்மான குழாயில், பழைய 'பிவிசி' குழாய் 15.33 கி.மீ., மற்றும் புதிய 'ஹெச்டிபிஇ' குழாய் மூலம் 63.96 கி.மீ., நீளத்தில் அமைத்து விநியோகம் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கின்படி 16 ஆயிரத்து 136 வீட்டு இணைப்புகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் மதிப்பீடு 25.45 கோடி ரூபாய், மற்றும் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு 1.75 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய தேவையாக 14.34 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதுவே 2040ல் 17.79 மில்லியன் லிட்டர் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஃபிஷ்னர் இந்தியா நிறுவனம் திட்ட தலைமை பொறியாளர் ராஜயோகசந்திரபோஸ் மற்றும் வடிவமைப்பு பொறியாளர் சரவணன் கூறியதாவது: அதிகரிக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறையில் 23 சதவீதம் தண்ணீர் வீணாக போவதை, புதிய திட்டத்தில் மிச்சப்படுத்த முடியும். மேலும், ஒவ்வொரு மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலும் பொருத்தப்படும் கருவி மூலம், தொட்டிகளில் தண்ணீர் வந்து சேர்வது, விநியோக்கிக்கப்படுவது குறித்த தகவல்களை அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். முழுமையாக நவீன தொழில்நுட்பத்தில், 'ஹெச்டிபிஇ' குழ õய் மூலம் வீடுகளுக்கு இணை ப்பு வழங்கப்படுவதால், தண்ணீர் வீணாவது தடுக்க முடியும். நகராட்சிக்கு தெரியாமல் கள்ளத்தனமாக இணைப்பு எடுக்க முடியாது. மேலும், புதிய திட்டம் மூலம் 24 மணிநேரமும் குழாயில்தண்ணீர் வருவதால், வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க வேண்டியதில்லை.

மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் எப்போதும் தண்ணீர் இருப்பு பராமரிக்கப்படுவதால், தேவையான அழுத்தம் எப்போதும் குழாயில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி கூறுகையில், ''திட்ட அறிக்கை நிதி ஆணையத்தின் ஆய்வுக்கு பிறகு நகராட்சி நிர்வாக ஆணையம் பார்வைக்கு சென்றதும், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு முறை குறித்து முடிவு செய்யப்பட்டு டெண்டர் அழைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறைகள் நடக்கும். திட்டம் துவங்கி ஓராண்டில் முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, கமிஷனர் ரகுபதி, நிர்வாக பொறியாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Saturday, 24 April 2010 05:56