தினமலர் 28.04.2010
புதிய குடிநீர் திட்டம் அனுமதி தி.மலையில் பட்டாசு வெடிப்பு
திருவண்ணாமலை:தி.மலை நகருக்கு புதிய குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டதால், நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.திருவண்ணாமலை நகரில் 36.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நேற்று காலை திருவண்ணாமலையில் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், நகராட்சி முன்பாக பட்டாசுகள் வெடிக்கப் பட்டன.இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன், கவுன்சிலர்கள் குணசேகரன், புகழேந்தி, ஷாஜகான், ராஜாங்கம், மோகன், சரவணன், ஜமீலாபீவி, மாலிக் பாஷா, முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன், பிரியா விஜயரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.