தினமணி 29.04.2010
குமரி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு: ஆட்சியர்
நாகர்கோவில், ஏப். 28: கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை நேரில் சென்று பதிவேட்டில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குமரி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 56 பேரூராட்சிகள் மற்றும் 99 கிராம ஊராட்சிகளிலுள்ள பொதுமக்கள் குடிநீர் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் சம்பந்தமான புகார்களை நேரில்சென்று புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம்.
மேலும் சம்பந்தப்பட்ட அலுவலக தொலைபேசி மூலமாகவும் அலுவலக நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை பதிவுசெய்து பயன்பெறலாம்.
புகார்களை பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் மற்றும் இதர விவரங்களை ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஹ்ஹந்ன்ம்ஹழ்ண்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர்