Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக ஓட்டேரி, பொன்னையாறு பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் பணி தொடங்கியது

Print PDF

தினமலர் 30.04.2010

வேலூர் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக ஓட்டேரி, பொன்னையாறு பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் பணி தொடங்கியது

வேலூர்:வேலூர் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக ஓட்டேரி, பொன்னையாறு பகுதிகளில் ரூ. 30 லட்சம் செலவில் ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.வேலூர் மாநகராட்சியில் 5 நாளைக்கு ஒரு முறை சப்ளை செய்யப்பட்ட குடிநீர், நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் குறைந்ததால் இப்போது 10 நாளுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. இதனால் நகரில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீரைத் தேடி மக்கள் குடங்களுடன் தெருத்தெருவாக அலைந்து தவிப்பது அன்றாட நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது.கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டம் தயாரித்து, 2.40 கோடி ரூபாய் நிதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அரசு வேலூர் மாவட்ட குடிநீர் பஞ்சம் போக்க மொத்தம் 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளதால், இதில் இருந்து ரூ. 20 லட்சம் நிதி மாநகராட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் மாநகராட்சி பொது நிதியில் இருந்து 10 லட்ச ரூபாய் அனுமதித்து, 30 லட்ச ரூபாய் செலவில பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் ஓட்டேரி நீர்ஆதாரப் பகுதியில் நான்கு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக 2 ஆழ்துளை இயந்திரங்கள் மூலம் 500 அடி ஆழம் வரை துளையிடும் பணி நடந்தது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது: நீர் ஆதாரங்களில் உள்ள உறை கிணறுகள் பல வற்றிவிட்டன. வேலூரின் முக்கிய நீர் ஆதராமான ஓட்டேரியில் தினமும் 10 லட்சம் லிட்டர் நீர் கிடைத்தது. ஆனால் இப்போது வெறும் ஒரு லட்சம் லிட்டர் நீரே கிடைக்கிறது.

மற்றொரு குடிநீர் ஆதரமான பொன்னையாற்றில் 60 லட்சம் லிட்டர் கிடைத்து வந்த நிலையில் இப்போது 30 லட்சம் லிட்டர் நீரே கிடைக்கிறது. சமீபத்தில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக மாவட்ட நிர்வாகம் 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. பொது நிதி 10 லட்சம் ரூபாய் சேர்த்து பொன்னையாற்றில் நான்கும், ஓட்டேரியில் நான்கும் மற்ற பகுதிகளில் 10ம் ஆக மொத்தம் 18 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இப்பணி நிறைவு பெற்றவுடன் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விரைவில் 5 நாளைக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Last Updated on Friday, 30 April 2010 07:28