தினமணி 30.04.2010
அரூரில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்: பேரூராட்சி அறிவிப்பு
அரூர், ஏப். 29: அரூரில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அளிவித்துள்ளது.
இது குறித்து பேரூராட்சி தலைவர் எம்.லட்சுமி, செயல் அலுவலர் ஜெ.திருஞானம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிக்கு கீழானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வறட்சியின் காரணமாக கீழானூர் நீரேற்று நிலையத்தில் போதிய தண்ணீர் இல்லை.
மேலும் வள்ளிமதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் பெறப்பட்டு நகர் பகுதியில் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை இருப்பதால் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.