Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருங்குளம் டவுன் பஞ்.,சில் புதிய வாட்டர் டேங்க் திறப்பு விழா

Print PDF

தினமலர் 03.05.2010

பெருங்குளம் டவுன் பஞ்.,சில் புதிய வாட்டர் டேங்க் திறப்பு விழா

சாயர்புரம் : பெருங்குளம் டவுன் பஞ்.,சில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வாட்டர் டேங்க்குகளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பெருங்குளம் டவுன் பஞ்.,குட்பட்ட பண்ணைவிளையில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஒரு வாட்டர் டேங்க்கும், பெருங்குளத்தில் 4 லட்சம் மதிப்பில் ஒரு வாட்டர் டேங்க்கும் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆர்.டி..,குருதேவி தலைமை வகித்தார். பெருங்குளம் டவுன் பஞ்.,தலைவர் சிவகுமார் வரவேற்றார். எம்.எல்.., சுடலையாண்டி மற்றும் டவுன் பஞ்., துணைத் தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள வாட்டர் டேங்க்குகளை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக.,செயலாளர் மெய்யழகன், திமுக.,பொதுகுழு உறுப்பினர் முருகானந்தம், போப் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலர் தேவசகாயம், கவுன்சிலர் மந்திரம், பண்டாரவிளை திமுக., நிர்வாகிகள் சொர்ணபாண்டி, சினோபால், மாற்கு, சேர்ந்திராஜன், கிறிஸ்டோபர், மண்டல துணை தாசில்தார் காளிதாஸ், ஆர்..அண்ணாமலை, ஒன்றிய பொறியாளர் மணி, ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி, வட்டார காங்.,தலைவர் கந்தசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் திமுக.,மற்றும் காங்.,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 03 May 2010 07:00