Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குளம் சீரமைப்பு பணி துவக்கம்

Print PDF

தினமலர் 21.07.2009

 

குடிநீர் திட்டப் பணிகள்: நகராட்சி தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி 21.07.2009

குடிநீர் திட்டப் பணிகள்: நகராட்சி தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை நகராட்சி குடிநீர் திட்டப் பணிகளை நகராட்சி தலைவர் இரா. ஸ்ரீதரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

நகரப் பகுதியில் குடிநீர் விநியோகம் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் திருவண்ணாமலைக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சமுத்திரம் ஏரி, உலகலாப்பாடியில் இரு திட்டங்கள், சாத்தனூர் அணை ஆகிய பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் போடப்படுகின்றன.

பணியை பார்வையிட்ட ஸ்ரீதரன் கூறியது:

சமுத்திரம் ஏரியில் இருந்து 15 முதல் 18 லட்சம் லிட்டர் தண்ணீரும், உலகலாப்பாடி திட்டம் ஒன்று, திட்டம் இரண்டில் இருந்து 35 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணி இம்மாதத்திற்குள் முடியும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நகருக்கு அதிக அளவு தண்ணீர் வழங்க முடியும் என்றார்.

நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன், உதவியாளர் பழனி உள்ளிடோர் உடனிருந்தனர்.

 

நெல்லைக்கு புதிய குடிநீர்த் திட்டங்கள் கொண்டுவருவதற்கு மாநகராட்சி முயற்சி

Print PDF
தினமணி 21.07.2009

நெல்லைக்கு புதிய குடிநீர்த் திட்டங்கள் வருமா?

திருநெல்வேலி, ஜூலை 20: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, துணை முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட முடிவு செய்துள்ளதாக மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இம் மாநகர் பகுதியில் சமீபகாலமாக குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் பிரச்னைக்குரிய காரணங்களை அறிவதற்காக, மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் த. மோகன், மண்டலத் தலைவர்கள் எஸ். விஸ்வநாதன், எஸ். முகம்மது மைதீன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இக் குழுவினர் மணப்படைவீடு தலைமை நீரேற்றும் நிலையம், கொண்டாநகரம் நீரேற்றும் நிலையம், பொட்டல் உறைகிணறு, திருமலைகொழுந்துபுரம், கக்கன்நகர் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்தனர்.

இங்கு குடிநீர் விநியோகிப்பதில் ஏற்படும் பிரச்னை குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் மேயர் விசாரணை செய்தார்.

இதேபோல, பாளையங்கோட்டை இலந்தகுளத்தில் ரூ.1 கோடியில் "தீம் பார்க்' அமைய உள்ள இடத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.

பின்னர், நிருபர்களிடம் மேயர் கூறியதாவது: குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, துணை முதல்வர் ஸ்டாலினை புதன்கிழமை சந்திக்க உள்ளோம்.

அப்போது மாநகருக்கு புதிய குடிநீர்த் திட்டங்கள் கொண்டுவருவதற்கு அவரிடம் முறையிடுவோம். பெருமாள்புரம், தியாகராஜநகர், என்.ஜி.. காலனி பகுதியில் ரூ.17 கோடியில் புதிய குடிநீர்த் திட்டமும், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி பகுதிகளில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர்த் திட்டங்களும் கொண்டு வருவதற்கு அவரிடம் வலியுறுத்துவோம்.

இந்த இரு திட்டங்களும் ஏற்கெனவே அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல பழைய குடிநீர்க் குழாய்களை மாற்றுவதற்கு ரூ.3 கோடி நிதியைப் பெறவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் மேயர்.

 


Page 378 of 390