Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

இன்றும், நாளையும் தெற்கு, மத்திய தில்லியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி               26.06.2013

இன்றும், நாளையும் தெற்கு, மத்திய தில்லியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தெற்கு மற்றும் மத்திய தில்லியில் பல்வேறு பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் புதன் (ஜூன் 26), வியாழன் (ஜூன் 27) இரு தினங்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போர்டு தெரிவித்துள்ளது.

தெற்கு தில்லியில் ஆர்.கே. புரம், வசந்த் விஹார், கத்வாரியா சராய், பெர் சராய், கிஷன் கார்ஹ், சஃப்தர்ஜங் மேம்பாட்டுப் பகுதிகள், முனிர்கா, மெஹ்ரெüலி, கிரீன் பார்க், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், சஃப்தர்ஜங் என்கிளேவ், ஜனக்புரி, சாகர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்; மத்திய தில்லிக்கு உள்பட்ட தில்லி கன்டோன்மென்ட், மோதி பாஹ், நனக்புரா, வசந்த் என்கிளேவ், சாந்தி நிகேதன், ஏஐஐஎம்எஸ், சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரு நாள்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமணி         25.06.2013

குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

அந்தியூர் பேரூராட்சியில் ரூ.3.24 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். அந்தியூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணீதரன், பேரூராட்சித் தலைவர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.கலைவாணன் வரவேற்றார்.

 அந்தியூர் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகக் கட்டடத்தை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் திறந்து வைத்ததுடன்,   குடிநீர் திட்டப் பணிக்கு அடிக்கலும் நாட்டினார்.

இதில் அவர் பேசியது:   அதிமுக ஆட்சியில் தொலைநோக்குடன் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் பயனில்லாத திட்டங்களால் கஜானா காலி செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா 33 துறை அமைச்சர்களுடன் மதிநுட்பத்துடன் செயல்பட்டு நிதிநிலையை மேம்படுத்தியதோடு, வரியில்லாத நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளார்.

 சமத்துவ, சமதர்ம சமுதாயம் மலர கல்வித் துறைக்கு கூடுதல் முக்கியத்துவத்துடன் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறார். மக்கள் நலத் திட்டங்களை அளிக்கும் முதல்வருக்கு நம்பிக்கையுடன் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

 12 மகளிர் குழுக்களுக்கு ரூ.18.95 லட்சம் நேரடிக் கடன், அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.6.7 லட்சம் சுழல் நிதி உள்பட 20 பயனாளிகளுக்கு ரூ.26.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 வருவாய் அலுவலர் எஸ்.கணேஷ், ஊராட்சிக் குழுத் தலைவர் செல்வம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், அதிமுக ஒன்றியச் செயலர் இ.செல்வராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அப்பாநாயக்கர் (அந்தியூர்), எஸ்.எம்.தங்கவேலு (பவானி), எஸ்.எஸ்.அய்யாசாமி (அம்மாபேட்டை), கோபி வேளாண் விற்பனை மைய இயக்குநர் வழக்குரைஞர் பி.யு.முத்துசாமி, செயல் அலுவலர் எம்.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 25 June 2013 08:48
 

இன்று குடிநீர் குறைதீர் முகாம்

Print PDF

தினமணி               24.06.2013 

இன்று குடிநீர் குறைதீர் முகாம்

குடிநீர் குறைதீர் முகாம் நகர தெற்கு நான்காம் துணை மண்டலத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு நான்காம் துணை மண்டலத்தில் உள்ள கோடிசிகனஹள்ளி, எச்.எஸ்.ஆர். லேஅவுட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர்

குறைதீர் முகாம், துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

 தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகளை குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 22945155.

 


Page 40 of 390