Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

2 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்

Print PDF
தினமணி                12.06.2013

2 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்


மதுரை மாநகராட்சி பகுதிகளில் பிரதான குடிநீர் குழாய்களில் மராமத்துப்பணி மேற்கொள்ள இருப்பதால், ஜூன் 13-ம் தேதி முதல் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், என மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் பூவம்பட்டி மேல்நிலைத் தொட்டி, கண்ணாப்பட்டி, அக்கரைப்பேட்டை, நடகோட்டை, மண்ணாடிமங்கலம், எலக்ட்ரிக் டவர், வாழைத்தோப்பு அருகில், கொடிமங்கலம் மற்றும் தாராப்பட்டி பிரிவு பகுதிகளிலுள்ள குழாய்களில் கசிவு ஏற்பட்டு, அதிக அளவில் குடிநீர் வீணாகி வருகிறது. இந்த பழுதுகளை சரிசெய்யும் பணிகள் ஜூன் 13-ம் தேதி முதல் 2 நாள்களுக்கு நடைபெற உள்ளது. எனவே, இந்த 2 நாள்களில் கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

 மண்டலம் எண். 1-ல் எச்எம்ஸ் காலனி மேல்நிலைத்தொட்டி குடிநீர் பகிர்மான பகுதிகள், அருள்தாஸ்புரம் மேல்நிலைத்தொட்டி குடிநீர் பகிர்மான பகுதிகளான வார்டு எண்.5,67,9,10,19,20-வது வார்டு பகுதிகள்.

 மண்டலம் எண் 2-ல் செல்லூர், ரேஸ்கோர்ஸ், ஏ.ஆர். டேங்க், புதூர் மருதங்குளம் மேல்நிலைத் தொட்டி, ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி, அண்ணாநகர், கே.கே. நகர் மேல்நிலைத் தொட்டிகளின் பகிர்மான பகுதிகளான வார்டு எண். 27,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45,46,47,48-வது வார்டு பகுதிகள். மண்டலம் எண் 3-ல் வில்லாபுரம் மேல்நிலைத்தொட்டி குடிநீர் பகிர்மான பகுதிகளான வார்டு எண். 61,62,63,64-வது வார்டுகள். மண்டலம் எண்.4-ல் சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி குடிநீர் விநியோகப் பகுதிகளான 77,87,88,89,90,91,92,93-வது வார்டு பகுதிகள்.

 மேற்கண்ட பகுதிகளில் நாளை முதல் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

வைகை குடிநீர் குழாய்களில் கசிவு; மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

Print PDF
தினத்தந்தி          11.06.2013

வைகை குடிநீர் குழாய்களில் கசிவு; மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்


வைகை அணையில் இருந்து வரும் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் குழாய்களில் பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்கான மராமத்து பணிகள் 2 நாட்கள் நடப்பதால் மதுரை நகரில் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

குடிநீர் குழாய்களில் கசிவு

மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. இதற்காக பிரதான குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை வரும் வழியில் இந்த குழாய்கள் பூவம்பட்டி மேல்நிலைத்தொட்டி, கண்ணாபட்டி, அக்கரைப்பேட்டை(நீர் அழுத்த முறிவுத்தொட்டி அருகில்), நடகோட்டை, மண்ணாடிமங்கலம் எலக்ட்ரிக் டவர், வாழைத்தோப்பு அருகில், கொடிமங்கலம் மற்றும் தாராபட்டி பிரிவு ஆகிய இடங்களில் உள்ள குழாய்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

எனவே குழாயில் பழுது பார்க்கும் பணிகள் வருகிற வியாழன், வெள்ளிக்கிழமை(13, 14–ந்தேதி)களில் நடக்கிறது.

விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

எனவே அந்த நாட்களில் மதுரை நகரில் 1–வது மண்டலத்தை சேர்ந்த எச்.எம்.எஸ். காலனி, அருள்தாஸ்புரம் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளான மாநகராட்சி வார்டு எண் 5, 6, 7, 9, 10, 19, 20 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

2–வது மண்டலத்தை சேர்ந்த செல்லூர், ரேஸ்கோர்ஸ், ஏ.ஆர். டேங்க், புதூர் மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி, ராஜாஜி பார்க் மேல்நிலைத்தொட்டி, அண்ணாநகர், கே.கே.நகர், ஆகிய மேல்நிலைத்தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகராட்சி வார்டுகள் 27, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

3–வது மண்டலத்தை சேர்ந்த வில்லாபுரம் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகராட்சி வார்டுகள் 61, 62, 63, 64 ஆகிய பகுதிகளிலும் குடிநீர் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

4–வது மண்டலத்தை சேர்ந்த சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகராட்சி வார்டுகள் 77, 87, 88, 89, 90, 91, 92, 93 ஆகிய வார்டுகளிலும் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
 

ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு

Print PDF
தினமணி       11.06.2013

ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு


காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய அத்திப்பட்டு பாலாற்றுப் படுகையில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.

காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ரா.ஆனந்தன் இதைத் தெரிவித்தார்.

அத்திப்பட்டு பாலாற்றுப் படுகையில் இருந்து 4 ஆழ்துளை கிணறுகள் மூலமாக காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. மீதமுள்ள 3 கிணறுகளில் தூர் வாரி, உறைகள் பொருத்தப்பட்டன. மேலும் வறட்சி நிவாரண நிதியில் இருந்து ரூ. மூன்றரை லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.
 


Page 45 of 390