Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

"நாளை மாலை வரை குடிநீர் விநியோகம் இல்லை

Print PDF
தினமணி       31.05.2013

"நாளை மாலை வரை குடிநீர் விநியோகம் இல்லை


மேல்விஷாரம் தில்லை மகால் திருமண மண்டபம் அருகேயுள்ள பொன்னை தலைமை நீரேற்றும் நிலையத்திலிருந்து குடிநீர் பம்பிங் செய்யும் பிரதான குழாய் பழுது ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு சனிக்கிழமை மாலை வரை குடிநீர் விநியோகம் இருக்காது என வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இக்குழாய் வியாழக்கிழமை மாலை பழுதடைந்தது. பழுது நீக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்

Print PDF

தினபூமி                 30.05.2013

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM(C)_13.jpg

சென்னை, மே.30 - ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கருணாநிதி ஆட்சியால் முடக்கி வைக்கப்பட்டது என்று, சென்னை தலைமைச் செயலகத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா  பேசியுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் மசநூரி நக்கனோ,  ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் முதுநிலை பிரதிநிதி டோமோஹைடு சிகூசி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசுச் செயலாளர்  கே.பணீந்திர ரெட்டி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

தர்மபுரி மற்றும் கிருழணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். இதனை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1986 ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக இருந்த போது 120 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. 

நான் முதன் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 

1994 ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. போதிய நிதி உதவி கிடைக்காததன் காரணமாக, இத்திட்டத்தை அப்போது நிறைவேற்ற இயலவில்லை. 

நான் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசால் திட்ட அறிக்கை திருத்தி அமைக்கப்பட்டு, தர்மபுரி மற்றும் கிருழணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6755 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதி உதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு 18.8.2005 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு 2008 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

இதற்கு கர்நாடக பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் 27.3.2008 அன்று ஒகேனக்கல்லில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று 26.3.2008 அன்று நான் அறிவித்தேன். இதனைத் தொடர்ந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பைத்தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரும் தீர்மானம் 27.3.2008  மற்றும் 

1.4.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், திடீரென்று 5.4.2008 அன்று சட்டப் பேரவைக்கு தெரிவிக்காமலேயே கைர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் நாம் கலந்து பேசி; தேவைப்பட்டால் களம் காண்போம் என்று கூறி அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தார் அன்றைய முதலமைச்சர்  மு.கருணாநிதி.  

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைத்த முன்னாள் முதலமைச்சர்,  கருணாநிதியின் செயலைத் தட்டிக் கேட்கும் வண்ணம் 8.4.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நான் சென்று, இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால், திமுக-வைச் சேர்ந்த, அன்றைய பேரவைத் தலைவர் அதனை அனுமதிக்கவில்லை.  

அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பேரவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த நான், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற துணிவில்லாத முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அரசியல் உறுதி மிக்க அரசு தான் மக்களுக்குத் தேவை என்றும், அத்தகைய அரசை அ.தி.மு.க. வழங்கும் என்றும் நான் தெரிவித்தேன்.  

பின்னர், ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில், 50 விழுக்காடு பணிகள் முடிவுற்று இருந்து இருக்க வேண்டும். ஆனால், அன்றைய நிலையில், வெறும் 18 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிவடைந்து இருந்தன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டதால், தற்போது இந்தத் திட்டம் இன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கிருழணகிரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற  மு.க.ஸ்டாலின், 2012 டிசம்பர் மாதம் முடிவடைந்து இருக்க வேண்டிய இந்தத் திட்டம் என்னுடைய அரசால் கிடப்பில் போடப்பட்டதாகர பொய்ப் பிரச்சாரம் செய்தார். பின்னர் இந்தத் திட்டம் முடிவடையும் தருவாயில் இருப்பதை தெரிந்து கொண்டதாலோ, என்னவோ, இந்தத் திட்டத்தை தன்னிடம் ஒப்படைத்தால் இரு மாதங்களில் திட்டத்தை நிறைவு செய்வதாக இந்த மாதம் தர்மபுரிக்கு சென்ற  ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, இரண்டாண்டு காலத்தில் செய்யாததை, ஆட்சியில் இல்லாத போது இரண்டு மாதத்தில் நிறைவு செய்வதாக  ஸ்டாலின் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.   

1928 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய இந்தத் திட்டத்தை இன்று துவக்கி வைத்ததில் நான் பெருமிதம் அடைகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, விடை பெறுகிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

 

நவீன தொழில் நுட்பத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்

Print PDF
தினமலர்         29.05.2013

நவீன தொழில் நுட்பத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்


தர்மபுரி: ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் ஒகேனக்கல் காவிரியில் துவங்கி, ஓசூர் வரை குடிநீர் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. நவீன தொழில் நுட்பத்துடன் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. தினம், 160 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்று நீரை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திடட்டத்தில், ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு முன்பாக கூத்தப்பாடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட காவிரியாற்றில், 630 குதிரை திறனுள்ள நான்கு மின் மோட்டார் மூலம் நீர் பம்பிங் செய்யப்பட்டு நிமிடத்துக்கு ஒரு லட்சத்து, 18 ஆயிரம் லிட்டர் ஆற்று நீரை எடுத்து அங்கிருந்து, 6.2 கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், ஆயிரம் மில்லி மீட்டர் விட்டமுள்ள இரு இரும்பு குழாய் மூலம் ஆற்று நீர் பம்பிங் செய்யப்படுகிறது.

ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்திட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 12 ஏக்கரில், 127.6 மில்லியன் லிட்டர் ஆற்று நீரை முழுமையாக சுத்திகரிப்பு கட்டுமானங்கள் அமைத்து நீர் சுத்திகரிக்கப்படவுள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆயிரத்து, 245 குதிரை திறன் உள்ள நான்கு மின் மோட்டார்கள் மூலம் ஆயிரத்து, 800 மீ., தூரத்தில் உள்ள இடை நிலை நீருந்து நிலையத்துக்கு, ஆயிரத்து, 300 மி.மீ., விட்ட இரும்பு குழாய்கள் இரு பைப்லைன் மூலமாக பம்பிங் செய்யப்படுகிறது.

இடைநிலை நீரூந்து நிலையத்தில் இருந்து மீண்டும் ஆயிரத்து, 170 குதிரை திறன் உள்ள நான்கு மின் மோட்டார்கள் மூலம் 3.5 கி.மீ., தொலைவில் பென்னாகரம் அடுத்த மடத்தில் மேடான இடத்தில், 240 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட பிரதான குடிநீர் சேகரிப்பு தரை மட்ட தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆயிரம் மி.மீட்டர் விட்டமுள்ள இரண்டு எம்.எஸ்., குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு சேகரிக்கப்படுகிறது. நீரூந்து மையங்களில் மின் மோட்டர்கள் இரண்டு மாற்று ஏற்பாட்டுக்காக கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பிரதான குடிநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் ஆயிரத்து, 500 மீ.மீ., முதல், 450 மி.மீ., வரையுள்ள குழாய்கள் மூலம், 6 ஆயிரத்து, 945 கி.மீ., தூரம் பிரதான குழாய்கள் மூலம் தன்னோட்டமாகவே (ஓசூர் பகுதி தவிர) குடிநீர் வழங்கப்படுகிறது.

ஓசூர் மற்றும் அதன் வழியோர குடியிருப்புகள் மேடான பகுதியில் அமைத்து இருப்பதால், அக்குழாய்ப் பாதையில் நான்கு இடங்களில் இடைநிலை நீருந்து நிலையங்கள் அமைத்து பம்ப்பிங் செய்து குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் குடிநீர், 2 ஆயிரத்து, 275 மேல்நிலை தொட்டிகளில் தேக்கப்பட்டும், 2, ஆயிரத்து 277 கி.மீ., நீள பகிர்மான குழாய்கள் அமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

நீர் சுத்தகரிப்பு தொழில் நுட்பம்: ஒகேனக்கல் - பென்னாகரம் சாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தினம், 160 மில்லியன் லிட்டம் சுத்திகரிப்பு செய்யும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு நீர் அளவிடும் மற்றும் ரசாயன கலப்பு தொட்டி, தெளிவு செய்யும் எட்டு தொட்டிகள், 12 வடிபடுகை, குளோரின் கலக்கும் தொட்டி, 70 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டு சுத்த நீர் சேகரிப்பு தொட்டி, சுத்த நீரேற்று நிலையம் மற்றும் மின் சாதன அறை, ரசாயன சேமிப்பு கிடங்கு (குளோரின்), ரசாயன சேமிப்பு கிடங்கு (படிகாரம் மற்றும் சுண்ணாம்பு),வண்டல் சமநிலை தொட்டி, வண்டல் திடப்படுத்தி, வண்டல் உலர் தொட்டி, நீர் அழுத்த முறிவு உபகரணம் ஆகிய கட்டமைப்புகள் சுத்திகரிப்பு நிலையில் அடங்கியுள்ளன.
 


Page 49 of 390