Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 10 இடங்களில் சிறு மின்விசை பம்பு

Print PDF
தினமணி        18.05.2013

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 10 இடங்களில் சிறு மின்விசை பம்பு


சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 10 வார்டுகளில் ரூ.12.50 லட்சம் செலவில் சிறு மின்விசை பம்பு அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகரில் 10 வார்டுகளில் கலைஞர் காலனி, காரைக்காட்டு வெள்ளாளர் தெரு, மீனவர் காலனி, வாகீசநகர், கன்னிராமன்தெரு, சின்னத்தெரு, வ.உ.சி. தெரு, குமரன் தெரு, ஓமக்குளத்தெரு, கனகசபைநகர் 3-வது மெயின் ரோடு ஆகிய இடங்களில் சிறு மின்விசைப் பம்புகளை புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் இயக்கி வைத்து குடிநீர் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அதிமுக நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர், பால்வளத் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், மீட்டிங் கிளார்க் காதர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

கோவில்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2வது பைப் லைன் திட்டப்பணி தொடக்கம் 18 மாதங்களில் முடிக்க திட்டம்

Print PDF
தினகரன்         16.05.2013

கோவில்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2வது பைப் லைன் திட்டப்பணி தொடக்கம் 18 மாதங்களில் முடிக்க திட்டம்


கோவில்பட்டி, : கோவில்பட்டியில் ரூ.82 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இரண்டாவது குடிநீர் பைப்லைன் திட்ட பணிகள் பூமி பூஜையுடன் தொடங் கியது. 18 மாதங்களில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து கோவில்பட்டி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் 35 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதால், வழிப்புற குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. மேலும், நகரின் மக்கள் தொகையும் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளதால் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, கோவில்பட்டி இரண்டா வது பைப் லைன் திட்டத் திற்கு ரூ.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் 80 சதவீதம் மானியம், மாநில அரசின் 10 சதவீதம் மானியம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகை 10 சதவீதம் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக சீவலப்பேரி கிராமத்தின் அருகே தாமிரபரணி ஆற்றில் 4.5 மீட்டர் விட்டமுள்ள 4 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப் படுகிறது. 9.65 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து 22.59 கிலோ மீட்டர் நீளம் இரும்பு குழாய் மூலம் நீர் உந்தப்பட்டு, இள வேலங்கால் கிராமத்தின் அருகில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப் படுகிறது. அங்கிருந்து 28.56 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படும் இரும்பு குழாய்கள் மூலம் கோவில்பட்டி நகராட்சியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட உள்ளது.இத்தொட்டியில் இருந்து நகரில் உள்ள 12 மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் காலம் 18 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டு வரும் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில்பட்டி இரண்டாவது குடிநீர் பைப் லைன் திட்டத்தை சில நாட் களுக்கு முன்பு சென் னையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இத்திட்டத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கோவில்பட்டி பார்க் ரோட்டில் அமைந்துள்ள குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவன் ஜான்சிராணி, இரண்டாவது பைப்லைன் திட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

 இதில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குத்தாலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் பாலசுப்பிர மணியன், லட்சுமணன், உதவி பொறி யாளர்கள் பிரியதர்ஷினி, விஜயபாலா, நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் சுப்புலட்சுமி, நகர அதிமுக செயலாளர் சங்கர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

"வறட்சியைப் போக்க ரூ. 47 கோடியில் பணிகள்'

Print PDF
தினமணி         13.05.2013

"வறட்சியைப் போக்க ரூ. 47 கோடியில் பணிகள்'


கரூர் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க ரூ. 47 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.

கரூர் ஆட்சியரகத்தில் கோடையில் நிலவும் வறட்சியைப் போக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் கூறியது:

கரூர் மாவட்டத்தில உள்ள 2 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 21 கோடியில் 627 ஆழ்குழாய்கள், 388 மினி பவர் பம்புகள், 423 இதர பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் வறட்சியைப் போக்க, போர்க்கால அடிப்படையில் ரூ. 26 கோடியில் 374 அடிகுழாய்களும், 396 மினிபவர் பம்புகளும், 703 இதர பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார்.  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டி.ஜி. வினய், எம்எல்ஏ பாப்பாசுந்தரம், மாவட்ட ஊராட்சித் தலைவர் கீதாமணிவண்ணன், நகராட்சிப் பொறியாளர் புண்ணியமூர்த்தி,  கோட்டாட்சியர் நெல்லைவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


Page 54 of 390