Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கோடையைச் சமாளிக்க லாரிகளில் குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

Print PDF
தினமணி         12.05.2013

கோடையைச் சமாளிக்க லாரிகளில் குடிநீர் விநியோகம் அதிகரிப்பு


கோடைகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 21 டேங்கர் லாரிகளை கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்காக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 231 லாரிகளும், 6 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 104 லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோடை காலத்தில் குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளதால் லாரி குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சனிக்கிழமைமுதல் (மே 11), 20 ஆயிரம், 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 டேங்கர் லாரிகள் கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீரை நகரில் கூடுதலாக விநியோகிக்க முடியும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ரூ. 22 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்: முதல்வர் இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்

Print PDF
தினமணி       09.05.2013

ரூ. 22 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்:  முதல்வர் இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்


திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 22.22 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய குடிநீர்த் திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா வியாழக்கிழமை காணொளிக் காட்சி (விடியோ கான்பரன்சிங்) மூலம் தொடக்கிவைக்கிறார். இது தொடர்பாக மேயர் விஜிலா சத்தியானந்த் புதன்கிழமை அளித்த பேட்டி:

 திருநெல்வேலி மாநகரத்தில் இப்போது தாமிரவருணி ஆற்றின் நீராதாரங்களில் இருந்து தினமும் 45 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கப் பெற்று, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு நபருக்கு 95 லிட்டர் குடிநீர் வீதம் இப்போது வழங்கப்படுகிறது.

 இந்நிலையில், புதிய குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குடிநீர்த் திட்டப் பணிகளை மேம்படுத்த 4.12.08-ல் அரசாணை வெளியிடப்பட்டு ரூ. 22.22 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

 இத் திட்டத்தில் தலைமை குடிநீர் நிலையத்தில் புதிதாக 9 நீர் உறிஞ்சு கிணறுகள், தரைகீழ் நீர்த்தேக்கத் தொட்டிகள், மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டன.

 மேலும், 11 மேல்நிலைத் தொட்டிகள், 43.10 கிமீ நீளத்துக்கு பிரதானக் குழாய்கள், 89.85 கிமீ தொலைவுக்கு பகிர்மானக் குழாய் அமைத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டு, வீட்டுக் குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 இத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார். இதற்கான விழா பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே நடைபெறுகிறது. இத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, தினமும் 13.97 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். எனவே, நாளொன்றுக்கு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்க முடியும். இதன் மூலம் 8, 9, 10, 19, 26, 27 ஆகிய வார்டுகளில் முழுமையாகவும், 31, 31 வார்டுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வசிக்கும் 78,611 பேர் பயனடைவர்.

 8, 9, 10 வார்டுகளுக்கான முதல் பகுதி திட்டத்தில் மொத்தம் 3,000 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் புதிதாக வழங்க முடியும். இதில் இதுவரை புதிய குடிநீர் இணைப்பு கோரி 264 பேர் விண்ணப்பித்துள்ளனர். 19, 26, 27 வார்டுகளுக்கான 2-வது பகுதி திட்டத்தில் மொத்தம் 18,600 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடியும். இதில் இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 மாநகராட்சியில் ஏற்கெனவே 63,120 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் உள்ளன என்றார் அவர்.

 துணை மேயர் பூ. ஜகநாதன் என்ற கணேசன், மண்டலத் தலைவர்கள் மேலப்பாளையம் ஹைதர் அலி, தச்சை மாதவன், மாநகர் மாவட்ட அதிமுக பொருளாளர் ஆர்.பி. ஆதித்தன் உடனிருந்தனர்.
 

குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க 7 இடங்களில் ஆழ்குழாய்

Print PDF
தினமணி       09.05.2013

குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க 7 இடங்களில் ஆழ்குழாய்


தஞ்சாவூர் நகராட்சியில் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க 7  இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், 22 -வது வார்டில் உள்ள பில்லுக்காரத் தெருவில் ரூ. 4.40 லட்சம்  செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக  நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

பின்னர், அவர் தெரிவித்தது:

தஞ்சாவூர் நகரில் வறட்சி நிவாரணத் திட்டப் பணிகள் 2012 - 13 ஆம் ஆண்டு குடிநீர் அபிவிருத்தி பணிகளின் கீழ் இந்த ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, 38 -வது வார்டு பாரதி நகரில் ரூ. 4.40 லட்சம் செலவிலும், 39 -வது வார்டு எலீசா நகர், மருத்துவக் கல்லூரியில் தலா ரூ. 5.50 லட்சம் செலவிலும், 40 -வது வார்டு பாலாஜி நகரில் ரூ. 4.40 லட்சம் செலவிலும், 20 -வது வார்டு சீனிவாசபுரம், 21 -வது வார்டு சேவப்பநாயக்கன்வாரியில் தலா ரூ. 5.50 லட்சம் செலவிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

இதன்மூலம், இப்பகுதிகளில் கோடைகால குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முடியும் என்றார் சாவித்திரி கோபால்.

நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், நகராட்சிப் பொறியாளர் சீனிவாசன், நகர்மன்றத் துணைத் தலைவர் கே. மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர்கள்  அனிதாராணி ராஜா, எம். சுவாமிநாதன், என். சரவணன், எஸ். சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


Page 55 of 390