Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள்

Print PDF
தினகரன்        07.05.2013

குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள்


ஈரோடு, : குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும் என்று கஸ்தூரிபா கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அரச்சலூர் அடுத்துள்ள கஸ்தூரிபாகிராமம் வெட்டுக்காட்டுவலசு காலனியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, அரச்சலூர் பேரூராட்சி 10வது வார்டு வெட்டுக்காட்டுவலசு காலனியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

வறட்சியினால் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆழ்குழாய் கிணறு, கைபம்பு, மேல்நிலை தொட்டி என குடிநீர் ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே வறட்சியை கருத்தில் கொண்டு ஆழ்குழாய்கிணறுகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி முடிந்தது நாளைக்குள் குடிநீர் வினியோகம் சீராகும் என அதிகாரிகள் தகவல்

Print PDF
தினதந்தி               06.05.2013

பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி முடிந்தது நாளைக்குள் குடிநீர் வினியோகம் சீராகும் என அதிகாரிகள் தகவல்


கோவைக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணி முடிந்து உள்ளது. எனவே நாளைக்குள் குடிநீர் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குடிநீர் திட்டம்

கோவை மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க சிறுவாணி அணையில் இருந்து 125 எம்.எல்.டி. தண்ணீர் தினமும் எடுக்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்து போனதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து குறைவான அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க பில்லூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டது. அதன்படி பில்லூர் ஒன்றாவது திட்டத்தில் இருந்து தினமும் 65 எம்.எல்.டி. தண்ணீரும், பில்லூர்–2–வது திட்டத்தில் இருந்து 55 எம்.எல்.டி தண்ணீரும் எடுக்கப்பட்டு வருகிறது.

திடீர் உடைப்பு

இதற்காக பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2–ந் தேதி இரவில் பில்லூர் முதல் திட்டத்தில் உள்ள குழாயில் கோவை வீரபாண்டி நாய்க்கனூரிலும், பில்லூர் 2–வது திட்டத்தில் கீரநத்தம் சூரிபள்ளம் அருகேயும் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீர் ஆறுபோன்று ஓடியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரிசெய்யும் பணியில் இறங்கினார்கள். பில்லூர் 2–வது திட்ட குழாயில் கசிவு மட்டுமே ஏற்பட்டதால் அது உடனே சரிசெய்யப்பட்டது.

சரிசெய்யப்பட்டது

முதலாவது குடிநீர் திட்டத்தில் உள்ள குழாயில் சுமார் 10 அடிக்கும் மேல் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் உடைப்பை சரிசெய்தனர். பின்னர் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியது.

நேற்று காலை முதல் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நாளைக்குள் சீராகும்


இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கூறும்போது, ‘பில்லூர் முதல் திட்டத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பு நேற்று (நேற்று முன்தினம்) இரவில்தான் சரிசெய்யப்பட்டது. பின்னர் சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம் என்று ஒவ்வொரு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குழாய் உடைப்பு காரணமாக 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போதுதான் குடிநீர் வினியோகம் தொடங்கி உள்ளதால் இன்னும் 2 நாட்களில் (நாளைக்குள்) அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்’ என்றனர்.
 

சென்னையில் 100 இடங்களில் ஆழ்துளை கிணறுகள்

Print PDF

தமிழ் முரசு            06.05.2013

சென்னையில் 100 இடங்களில் ஆழ்துளை கிணறுகள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடனடியாக 100 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், பக்கத்து மாவட்டங்களில் உள்ள விவசாய பம்ப் செட்டுகளிலிருந்து தினமும் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரை கொள்முதல் செய்யவும் குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், பூண்டி, ரெட்ஹில்ஸ் நீர் ஆதாரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் அங்கிருந்து பெறப்படும் நீரின் அளவு அதிவேகமாக குறைந்து வருகிறது. பருவ மழை இல்லாமல் வெயில் கடுமையாக கொளுத்தி வருவதால் வரும் சில நாட்களில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகரில் மொத்தம் 100 இடங்களில் புதிதாக உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 260 அடி வரை ஆழம் கொண்டவையாக இருக்கும். இந்த ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பொருத்தப்பட்டு, அருகில் டேங்க் வைக்கப்பட்டு, தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த பணிகளுக்கான டெண்டர் 2 ம் தேதியன்று திறக்கப்பட்டு போர்வெல் அமைக்க தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

பம்ப் செட்டிலிருந்து...: பூண்டி, காரணி, சிறுவானூர், சிறுவானூர் கண்டிகை, புல்லரம்பாக்கம், மோவூர், காந்தி நகர், கீழானூர், மேலானூர், ராமராஜன் கண்டிகை, வெள்ளியூர், வெள்ளியூர் சத்திரம், மாகரல், அத்தங்கி காவனூர், கொமக்கம்பேடு ஆகிய பகுதிகளில் பம்ப் செட் வைத்திருக்கும் உரிமைதாரர்கள் குடிநீர் வடிகால் வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த பம்ப் செட்டுகளிலிருந்து ஓராண்டுக்கு தண்ணீர் கொள்முதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட பம்ப் செட் உரிமையாளர் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரை வாரியத்துக்கு தர வேண்டும்.

இதற்கான தொகை மாதம் தோறும் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பம்ப் செட்டை இயக்க வேண்டும். இதற்கான மின் கட்டணம், செலவினங்களை வாரியம் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 56 of 390