Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

10 ஆண்டுகளாக பழுதான குடிநீர் குழாய் மாற்றம்

Print PDF
தினமணி        06.05.2013

10 ஆண்டுகளாக பழுதான குடிநீர் குழாய் மாற்றம்


காஞ்சிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழுதான நிலையில் இருந்த குடிநீர் குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்துக்கு பாலாறு மற்றும் திருப்பாக்கடல் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் மொத்தக் குடிநீர் அளவில் 120 லட்சம் லிட்டர் குடிநீர் வேலூர் மாவட்டம் திருப்பாக்கடல் குடிநீர் திட்டத்தின் மூலம் சமாளிக்கப்படுகிறது.

மீதமுள்ள 80 லட்சம் லிட்டர் குடிநீர், பாலாற்று குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டு வரப்படுகிறது.

திருப்பாக்கடலில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருந்து பைப்லைன் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர், பிள்ளையார்பாளையம் வேகவதி ஆற்றங்கரையில் உள்ள கீழ் நிலைக் குடிநீர் தொட்டியில்(சம்ப்) குடிநீர் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து கிருஷ்ணன் தெரு வழியாக குழாய் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக கிருஷ்ணன் தெருவில் பிரதான பைப் லைன் சந்திப்பு கடந்த 1990-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இருந்து ஒரு பகுதியாக சின்னகாஞ்சிபுரம், மற்றொரு பகுதி வழியாக பெரியகாஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் தேக்கப்பட்டு நகரில் உள்ள 25 ஆயிரம் வீட்டு குடிநீர் இணைப்புகள் மற்றும் தெருக்குழாய் இணைப்புகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

பைப்லைன் சந்திப்பில் பழுது: இந்நிலையில் கிருஷ்ணன் தெருவில் உள்ள பிரதான பைப்லைன் சந்திப்பில் ஓட்டை விழுந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதான நிலையில் இருந்தது. அவ்வப்போது பழுது சரி செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் 520 மி.மீ. விட்டம், 1.5 மீட்டர் நீளம் கொண்ட பைப்லைன் சந்திப்பு சல்லடை போல ஓட்டை விழுந்தது. இதனால் கடந்த சில நாள்களாக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் 520 மி.மீ. விட்டம், 1.5 மீட்டர் நீளம் கொண்ட புதிய பைப்லைன் ராணிப்பேட்டையில் இருந்து புதிதாக வாங்கிவரப்பட்டு பொறுத்தும் பணி 3 நாட்கள் நடைபெற்றது.
 

"குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை'

Print PDF
தினமணி        04.05.2013

"குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை'


வேட்டவலம் பேரூராட்சியில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு, பேரூராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யும் கிணறு தூர் வாரப்பட்டுள்ளது. வேட்டவலம் அரண்மனைத் தெருவில் உள்ள 2000 லிட்டர் கொள்ளளவு மினி பவர் பம்பு, 4000 லிட்டராக மாற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பேரூராட்சிப் பகுதியில் உள்ள 71 கைப்பம்புகள் மற்றும் 88 மினி பவர் பம்புகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீர் ஆதாரம் குறைந்துள்ள கைப்பம்பு மற்றும் மினி பவர் பம்புகளை தூர் வாரி குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கணேசன் தெரிவித்துள்ளார்.
 

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் தண்டபாணி உறுதி

Print PDF
தினத்தந்தி       03.05.2013

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் தண்டபாணி உறுதி


திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தண்டபாணி உறுதியளித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அனைத்து கவுன்சிலர்களுடான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெயா தலைமை தாங்கினார். கமிஷனர் தண்டபாணி, துணை மேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் வெங்கட்ராஜ்(சுயே) பேசுகையில், மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை எடுத்து கூற வேண்டும் என்றார்.

வெள்ளை அறிக்கை தேவை


எதிர் கட்சி தலைவர் அன்பழகன்(தி.மு.க.) பேசுகையில், ‘‘மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். குடிநீரே வராத நிலையில் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணத்தையும் உயர்த்தி தீர்மானத்தை நிறைவேற்றப்படுவது பொதுமக்களுக்கு எதிரானது என்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலர் ரவிசங்கர் பேசுகையில், மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகள் பற்றியும், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடுத்துக்கூறினர்.

அதனைதொடர்ந்து கமிஷனர் தண்டபாணி பதில் அளித்து பேசியதாவது:–

ஆழ் துளை கிணறுகள்


திருச்சி மாநகராட்சியில் 6 இடங்களில் குடிநீர் ஆதாரம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 98 மில்லியன் லிட்டர் அளவு குடிநீர் கிடைத்தது, தற்போது 82 மில்லியன் லிட்டர் அளவு மட்டுமே கிடைக்கிறது.

16 மில்லியன் லிட்டர் அளவு குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மொத்தம் 48 ஆழ்துளை கிணறுகளில் 30 ஆழ்துளை கிணறுகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. 18 ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் மாநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சின்டெக்ஸ் தொட்டி

தற்போது மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேபோல ஜெனரேட்டர் பயன்படுத்தி குடிநீர் தொட்டிகளில் குடிநீர் ஏற்றவும், லாரிகள் செல்ல முடியாத இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாகவும், அடி பம்புகளும் அமைக்கப்படும்.

கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சினைகள் பற்றி தெரிவிக்கலாம். மேலும் எந்தெந்த பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை கண்டறிய கவுன்சிலர்கள் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். மின்மோட்டார்கள் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கோட்ட தலைவர்கள் லதா, மனோகர் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 


Page 57 of 390