Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குமாரபாளையம் நகரில் ரூ.1.37 கோடியில் 38 ஆழ்குழாய் கிணறுகள்: வறட்சி நிவாரணத் திட்டத்தில் அமைக்க கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினமணி         02.05.2013

குமாரபாளையம் நகரில் ரூ.1.37 கோடியில் 38 ஆழ்குழாய் கிணறுகள்: வறட்சி நிவாரணத் திட்டத்தில் அமைக்க கூட்டத்தில் தீர்மானம்


குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ரூ.1.37 கோடி மதிப்பில் 38 இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகித்தல், பழுதடைந்த குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). பொறியாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, துப்புரவு அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் : சிவசுப்பிரமணியம் (தேமுதிக) : நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பண்டங்கள், குடிநீர், குளிர்பானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழைய எண்ணெயைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்காரவேலன் (அதிமுக) : நகரின் மையப்பகுதியில் ஓடும் கோம்புப் பள்ளத்தை கடைசி வரை தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.

ரூபாராணி (காங்.): ராஜாஜி வீதியில் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. சாக்கடை பணிகளும் பாதியில் நிற்கிறது. மக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும்.

சிவசுப்பிரமணியம் (தேமுதிக): குமாரபாளையம் நகரில் கேபிள் நடத்துவோர் ரூ.70 கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக ரூ.100 வசூல் செய்கின்றனர். தர மறுப்போருக்கு கடுமையாக மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த வேண்டும்.

23-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைக் போக்க வேண்டும் என உறுப்பினர் சுகுணாவும், 2 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் தண்ணீரும் போதுமான அளவு வருவதில்லை. எனவே, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் என 28-வது வார்டு உறுப்பினர் காளியம்மாளும் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து குறைகள் தீர்க்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில், வறட்சி நிவாரணத் திட்டத்தில் குமாரபாளையம் சேரன் நகர், முருங்கைக்காடு, அபெக்ஸ் காலனி, சுந்தரம் காலனி உள்பட 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கைப்பம்பு பொருத்தவும், தண்ணீர் தேவை அதிகமுள்ள 28 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, சிறிய மோட்டார் பொருத்தி தண்ணீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும், காவேரி நகர், பெராந்தர்காடு, விட்டலபுரி, அம்மன் நகர் உள்பட 10 இடங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் வைத்து, தொட்டிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கவும், முருங்கைக்காடு, நேதாஜி நகரில் ஆழ்குழாய் கிணறுகளை தூர்வாரி சுத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் மின்மோட்டார்கள மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகளை ரூ.1.37 கோடியில் நிறைவேற்றுதல் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

நகராட்சி வளாகத்தில் குடிநீர் வசதி

Print PDF
தினமணி                  02.05.2013

நகராட்சி வளாகத்தில் குடிநீர் வசதி


திண்டிவனம் நகராட்சி வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

அதற்காக ரூ.1.30 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை நகர் மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார்.  நிகழ்ச்சியின் போது ஆணையர் அண்ணாதுரை, பொறியாளர் வெங்கடேசன், மேலாளர் கிருஷ்ணராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன், முரளிதாஸ் உள்பட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
Last Updated on Friday, 03 May 2013 07:28
 

புதிய ஆழ்குழாய் கிணறு திறப்பு

Print PDF
தினகரன்                 29.04.2013

புதிய ஆழ்குழாய் கிணறு திறப்பு

உடுமலை, :  உடுமலை 31வது வார்டு எம்ஜிஆர் நகரில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது. மோட்டார் மூலம் இங்கு தண்ணீர் சேமித்து விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் விநியோகத்தை நகராட்சி தலைவர் சோபனா துவக்கி வைத்தார்.குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்தும் படி நகராட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.

இதேபோல் 28வது வார்டு பத்ரகாளியம்மன் லேஅவுட்டில் கூடுதல் கழிப்பிடமும், சிங்கப்பூர் நகரில் ரூ.7.80 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கண்ணையா, கவுன்சிலர்கள் ரேணுகா, கபிலன், மகாலட்சுமி, மளிகை செல்வம், முரளீதரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
 


Page 58 of 390