தினமணி 24.04.2013
இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் பகுதியில் மின்சார வாரிய பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஏப்ரல் 24) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
கடலூர் நகர்மன்ற ஆணையர் ப.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகர குடிநீர் ஆதார இடங்களான திருவந்திபுரம் மற்றும் கேப்பர்மலை, தலைமை நீரேற்று நிலையங்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 23-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
மின்தடைக் காரணமாக மேல்நிலை தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்ற இயலவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், செம்மண்டலம், அண்ணா நகர், தேவனாம்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகம் ஆகிய நகரப் பகுதிகளில் 24-ம் தேதி காலை குடிநீர் வழங்க இயலாது, மேலும் வரும் 25-ம் தேதி காலை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் பகுதியில் மின்சார வாரிய பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஏப்ரல் 24) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
கடலூர் நகர்மன்ற ஆணையர் ப.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகர குடிநீர் ஆதார இடங்களான திருவந்திபுரம் மற்றும் கேப்பர்மலை, தலைமை நீரேற்று நிலையங்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 23-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
மின்தடைக் காரணமாக மேல்நிலை தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்ற இயலவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், செம்மண்டலம், அண்ணா நகர், தேவனாம்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகம் ஆகிய நகரப் பகுதிகளில் 24-ம் தேதி காலை குடிநீர் வழங்க இயலாது, மேலும் வரும் 25-ம் தேதி காலை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.