Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF
தினமணி        24.04.2013

இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்


கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் பகுதியில் மின்சார வாரிய பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஏப்ரல் 24) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

கடலூர் நகர்மன்ற ஆணையர் ப.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகர குடிநீர் ஆதார இடங்களான திருவந்திபுரம் மற்றும் கேப்பர்மலை, தலைமை நீரேற்று நிலையங்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 23-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

மின்தடைக் காரணமாக மேல்நிலை தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்ற இயலவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், செம்மண்டலம், அண்ணா நகர், தேவனாம்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகம் ஆகிய நகரப் பகுதிகளில் 24-ம் தேதி காலை குடிநீர் வழங்க இயலாது, மேலும் வரும் 25-ம் தேதி காலை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
 

குடிநீர் தட்டுப்பாடு வராது: பேரூராட்சிகளின் இயக்குநர் உறுதி

Print PDF
தினமணி        22.04.2013

குடிநீர் தட்டுப்பாடு வராது: பேரூராட்சிகளின் இயக்குநர் உறுதி


பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் போர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தக்கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பேரூராட்சிகளின் இயக்குநர் டாக்டர் செல்வராஜ், உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனையொட்டி, இப்பேரூராட்சிக்குட்பட்ட இடங்களை பேரூராட்சிகளின் இயக்குநர் டாக்டர் செல்வராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உளுந்தூர் ஏரி கிணறு, விருத்தாசலம் ரோடு ஏரி, சென்னை சாலையில் உள்ள ஸ்ரீராம்நகர், வி.கே.எஸ் நகர், கையிலாச குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கடலூர் மண்டலத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ரூ.1.20 கோடி நிதியில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இடங்களில் குடிநீர் போர் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது.

உளுந்தூர்பேட்டை ஏரிகளில் உள்ள குடிநீர் கிணறுகளை மழைக்காலங்களில் சென்று பார்வையிடுவதற்கு கிணறு வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். விருத்தாசலம் ரோட்டிலுள்ள ஏரியில் உள்ள கிணற்றை 5 மீட்டர் ஆழப்படுத்தி பாதுகாப்பாக மூடுவதற்கும், செப்பனிடுவதற்கும் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆய்வின்போது செயற்பொறியாளர் சின்னதுரை, கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குமரகுரு, உளுந்தூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், தலைவர் க.ஜெயசங்கர், கவுன்சிலர் மாலதி ராமலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.
 

கூடலூர் பேரூராட்சியில் 5 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள்

Print PDF
தினமணி        21.04.2013

கூடலூர் பேரூராட்சியில் 5 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள்


பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் ரூ.20 லட்சம் செலவில் ஐந்து இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.

தமிழக அரசின் வறட்சி நிவாரண சிறப்புத் திட்டத்தின் கீழ் பொது நிதியில் இருந்து 1-வது வார்டுக்குள்பட்ட செல்வபுரம், 6-வது வார்டுக்குள்பட்ட சாமிசெட்டிபாளையம், 17-வது வார்டுக்குள்பட்ட சக்தி நகர், 8-வது வார்டுக்குள்பட்ட வஞ்சிமாநகர், 12-வது வார்டுக்குள்பட்ட பி.அன்டு டி. காலனி ஆகிய இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.

இப்பணியை செயல் அலுவலர் சிவசாமி முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் அறிவரசு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் செல்வராஜ் மற்றும் மன்ற உறுப்பினர்கள், நிலத்தடி நீர் ஊற்று நிபுணர் தனபாலன் ஆகியோர் இப்பணிகளைப் பார்வையிட்டனர்.
 


Page 61 of 390