ராயபுரம், தண்டையார்பேட்டையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து
Wednesday, 03 April 2013 06:30
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமணி 03.04.2013
ராயபுரம், தண்டையார்பேட்டையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து
குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழன் (ஏப்.4) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஏப்.5) குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு: குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் சென்னை தங்கசாலை சந்திப்பில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, தங்கசாலை உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைபடலாம். குடிநீர் விநியோகம் குறித்த விவரங்களுக்கு 8144930904,8144930905, 8144930906,8144930211, 8144930213 ஆகிய எண்களில், பகுதிப் பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
|
திருச்சி மாநகரில் வறட்சியை சமாளிக்க ரூ.3½ கோடியில் குடிநீர் பணிகள் மேயர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு
Wednesday, 03 April 2013 00:00
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினத்தந்தி 03.04.2013
திருச்சி மாநகரில் வறட்சியை சமாளிக்க ரூ.3½ கோடியில் குடிநீர் பணிகள் மேயர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு
திருச்சி மாநகராட்சியில் வறட்சியை சமாளிக்க குடிநீர் தேவைக்காக ரூ.3 கோடியே 59 லட்சம் செலவிலான குடிநீர் பணிகளை மேயர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேயர் ஜெயா ஆய்வு
திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.3 கோடியே 59 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும், கம்பரசம்பேட்டை அருகே காவிரி ஆற்றில் மாநகராட்சிக்கான தலைமை நீரேற்று பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதையும் கோட்ட தலைவர்கள், பொறியாளர்களுடன் மேயர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.3½ கோடி
திருச்சி மாநகராட்சியில் கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.3 கோடியே 59 லட்சம் (வறட்சி நிவாரண திட்டத்தில்) வழங்கி இருக்கிறார். இதன் மூலம் கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் 60 அடி ஆழத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளும், புதிதாக மின்மோட்டார் மற்றும் மின்சார கேபிள் வயர்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கைப்பம்புகள் பொருத்தும் பணி
மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தலா ரூ.40 ஆயிரம் மதிப்பில் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் கைப்பம்புகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் பற்றாக்குறை உள்ள 50 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் வைத்து லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் பவர் பம்புகள் பொருத்தி தேவையான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக, 5 புதிய ஜெனரேட்டாகள் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி லாரிகள் மூலமும், 4 வாடகை லாரிகள் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வறட்சியான காலத்திலும் 92 மில்லியன் லிட்டர் குடிநீர் தட்டுப்பாடின்றி ஒவ்வொரு நாளும் வழங்குவதற்கான அனைத்து பணிகளும் முதல்–அமைச்சர் உத்தரவின்படி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
ஆய்வின்போது, கோட்ட தலைவர்கள் லதா, சீனிவாசன், ஞானசேகரன், மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன், உதவி கமிஷனர் ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதனைதொடர்ந்து கோ.அபிசேகபுரம் கோட்டம் களத்துமேடு பகுதியில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் கைப்பம்பு அமைக்கப்பட்டுள்ளதையும், குளத்துமேடு பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டிய பணிகளையும் மேயர் ஜெயா பார்வையிட்டார்.
பளியன்குடியில் "போர்வெல்' கூடலூர் நகராட்சி தீர்மானம்
Tuesday, 02 April 2013 10:13
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமலர் 02.04.2013
பளியன்குடியில் "போர்வெல்' கூடலூர் நகராட்சி தீர்மானம்
கூடலூர்:பளியன்குடியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, குடிநீர் வசதிக்காக புதிய போர்வெல் அமைக்க, கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர் நகராட்சி கூட்டம், தலைவர் அருண்குமார் தலைமையில், கமிஷனர் ராஜேந்திரன், துணைத்தலைவர் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. வீட்டு குடிநீர் இணைப்புக்காக சாலைகளை தோண்டுவதற்கு, சாலை சீரமைப்புக் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்துவது, பழங்குடியின மக்கள் வசிக்கும் பளியன்குடியில், குடிநீர் வசதி செய்வதற்காக போர்வெல் அமைப்பது.
லோயர்கேம்ப் மற்றும் பளியன்குடிக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக புதிய குடிநீர் சேமிப்பு தொட்டி கட்டுவது, உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
|
|
|
|
Page 70 of 390 |