Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

"கோடை தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' திட்டக்குழு கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

Print PDF
தினமலர்              02.04.2013

"கோடை தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' திட்டக்குழு கூட்டத்தில் ஆட்சியர் தகவல்


திருவள்ளூர்:""கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, திட்டக்குழு கூட்டத்தில் ஆட்சியர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவருமான ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

திருவள்ளூர் தொகுதி எம்.பி.வேணுகோபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் வீர ராகவ ராவ் கூட்டத்தை துவங்கி வைத்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

காட்டுப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில் இருந்து, மின்சார எரிமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி தற்போது, எந்த நிலையில் உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

திருவள்ளூர் நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக, நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு, வரைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து ஆட்சியர் கூறியதாவது:

உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளிலும் சாலை மேம்பாட்டு பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம் சீரமைக்கும் பணியும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், குடியிருப்புகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் வசதி செய்து கொடுக்கப்படும். மாவட்டத்தில் வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

துறையூர் நகரில் 42 ஆழ்குழாய் கிணறு அமைப்பு நகராட்சி கூட்டத்தில் தலைவர் தகவல்

Print PDF
தினகரன்      01.04.2013

துறையூர் நகரில் 42 ஆழ்குழாய் கிணறு அமைப்பு நகராட்சி கூட்டத்தில் தலைவர் தகவல்


துறையூர்: வறட்சியை சமாளிக்க துறையூர் நகரில் 42 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக நகர்மன்ற கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது.

துறையூர் நகர்மன்ற கூட் டம் தலைவர் மெடிக்கல் முரளி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் மதி வாணன், பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் செல்வராஜ், நல்லதம்பி, மனோகரன், சுதாகர், பாஸ் கர், கார்த்திகேயன், விஜயசங்கர், கோபி, தனம் கருப் பையா, சுதாசெங்குட்டுவன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே விவாதம் நடந்தது.

நல்லதம்பி (திமுக): கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள்.

அஸ்வின்குமார் (காங்.): அஜண்டாவில் 4 மணிக்கு தொடங்கும் என்று போட்டிருந்தாலும் அதன்படி கூட்டம் தொடங்காமல் சவுகரியம்போல் கூட்டம் நடத்துகிறீர்கள். இன்று முக்கால் மணிநேரம் தாமதம். சென்ற கூட்டம் பட்ஜட் தாக்கல் செய்யும் கூட்டமாக இருந்தும்கூட 10 நிமிடம் தாமதமாக தொடங்கி 2 நிமிடங்களில் முடிந்து விட்டது. அப்படியென்றால் மக்கள் பிரச்னையை எப்படி பேசு வது. எனது வார்டில் தண் ணீர் பிரச்னை கடுமையாக உள்ளது. எனது வார்டிலும், பக்கத்து வார்டிலும் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வரவில்லை என்றார்.

பதிலளித்த தலைவர், வறட்சியை சமாளிக்க நகராட்சி பகுதியில் 42 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் வார்டு மக்கள் கேட்டுக் கொண்டதற்காக லாரியில் ஒரு நாள் தண்ணீர் வழங்கினோம். பிரச்னையை சொன்னால்தான் தெரியும் என்றார்.

பொறியாளர் பேசுகையில், இன்னும் தேவையான இடத்தை உறுப்பினர் தேர்வு செய்து சொன்னால் புதிய போர் போட்டுத் தருகிறோம் என்றார்.

கவுன்சிலர் சுதாகர்: தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதற்கு நடவடிக்கை இல்லை என்றார்.

ஆணையர்: அடுத்த கூட்டத்திற்குள் மின்மோட் டாரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்திலேயே தண்ணீர் விநியோகத்திற் காக ஜெனரேட்டர் வசதி செய்துள்ள நகராட்சி நமது நகராட்சி தான் என்றார்.

நல்லதம்பி (திமுக): எனது வார்டுக்கு காசிக்குளம் தண்ணீர்தான் கிடை த்து வந்தது. எனவே அங்கு சைடு போர் போட்டு மீண் டும் அங்கிருந்து தண்ணீர் எடுத்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

ஆணையர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தொட்டியம் பேரூராட்சியில் ரூ11 லட்சத்தில் குடிநீர் பணி அதிகாரி ஆய்வு

Print PDF
தினகரன்        01.04.2013

தொட்டியம் பேரூராட்சியில் ரூ11 லட்சத்தில் குடிநீர் பணி அதிகாரி ஆய்வு

தொட்டியம்:  தொட்டியம் பேரூராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.

தொட்டியம் பேரூராட்சியில் வாணப்பட்டறை, மதுரை காளியம்மன் கோயில், திருச்சி- சேலம் மெயின்ரோடு, வடகரை உள்ளிட்ட 10 இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்து இடங்களில் ஆழ்குழாய் கிணறும், 5 இடங்களில் மினிடேங்க் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ரூ.11 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மார்க்கரேட் சுசீலா, உதவி செயற்பொறியாளர் பாலகங்காதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தொட்டியம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் சித்ரா ஆகியோர் உடன் சென்றனர்.
முன்மாதிரியாக அமைக்கப்படுகிறது.
 


Page 71 of 390