Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு

Print PDF
தினமணி         31.03.2013

குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு


கோத்தகிரியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கோத்தகிரி பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சுந்தரி வரவேற்றார். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் நடந்த விவாதம்:

ராஜேஷ்வரி வடிவேல் (மதிமுக): கோத்தகிரியில் உள்ள காம்பாய்க்கடை, பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதால், குடிநீர் மாசுப்படுகிறது என்றார்

தலைவர் சை.வாப்பு: குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும், நீரோடைகள் சுத்தகரிக்கப்படும்.

சுகாதார ஆய்வாளர் கண்ணன்: குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய கிணறுகள் வெட்டப்படும். பழுதடைந்த குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குடிநீர் குழாய்கள் பொருத்தப்படும்.

மணி (அதிமுக): நடைபாதை மேம்பாலம் அமைக்க வெல்டிங் வேலைக்கு ஆகும் மின் செலவை பேரூராட்சி ஏற்றுக்கொள்ளக் கூடாது.

தலைவர்: நடைபாதை மேம்பாலம் அமைக்க செலவாகும் மின் கட்டணத்தை ஒப்பந்ததாரரே செலுத்தி விடுவார்.

கேஏபி.சீனிவாசன் (அதிமுக), சரவணன்(காங்), தங்கேஷ் (திமுக): கோத்தகிரியில் அனுமதியில்லாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபால்(சுயே),சிவக்குமார்(தேமுதிக): மார்க்கெட் கடைகளுக்கு வாடகை உயர்த்த வேண்டும்.

தலைவர்: அனுமதியில்லாத கட்டடங்களை இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மார்க்கெட் கடை வாடகை உயர்த்த ஆலோசிக்கப்படும். நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு தடை விதிக்கப்படும் என்றார்.
 

குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.2.12 கோடியில் பணி

Print PDF
தினமலர்        30.03.2013

குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.2.12 கோடியில் பணி


ஓசூர்: ""ஓசூர் நகராட்சியில் போர்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க, இரண்டு கோடியே, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி வெளியிட்ட அறிக்கை:

ஓசூர் நகராட்சியில், குடிநீர் பிரச்னை பரவலாக இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க போர்கால அடிப்படையில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆழ்துளை கிணறுகள் போடப்படுகிறது.

மின்தடை ஏற்படும்போது தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய பேரண்டப்பள்ளி, குமுதேப்பள்ளி, சமத்துவபுரம் நீருந்து நிலையங்களில், 22 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 100 கே.வி.ஏ., திறன் கொண்ட மூன்று சென் செட் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ள வார்டுகளில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின் மோட்டார்கள் பொறுத்தப்பட உள்ளது. குடியிருப்புகளுக்கு தனியார் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்ய, 24 லட்சத்து, 50 ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வரும் வரை, குடிநீர் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

குடிநீர் பிரச்னை தீர வாடகை ஜெனரேட்டர்: பொள்ளாச்சி நகராட்சியில் தீர்மானம்

Print PDF
தினமணி         29.03.2013

குடிநீர் பிரச்னை தீர வாடகை ஜெனரேட்டர்: பொள்ளாச்சி நகராட்சியில் தீர்மானம்


மின்தடையால் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க, நீரேற்று நிலையத்தில் வாடகைக்கு ஜெனரேட்டர் அமைக்க பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி நகர்மன்ற உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், குடிநீர்ப் பிரச்னையைப் போக்கும் விதமாக மின்தடை ஏற்படும் நேரத்தில் மின் மோட்டார்களை இயக்குவதற்காக ரூ. 36 லட்சம் பொது நிதியில் இருந்து 500 கே.வி.ஏ. திறன் கொண்ட ஜெனரேட்டரை வாடகைக்கு வாங்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  பொள்ளாச்சி, ராஜா மில் சாலையில் மார்க்கெட் சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் திடல் வரை உள்ள சாலை பழுதடைந்துள்ளதால், அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்தச் சாலையைப் புதுப்பிக்க ரூ. 24 லட்சமும், குமரன் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 12 லட்சம் ஒதுக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இத்தீர்மானங்கள், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த நகராட்சிக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் மெக்சன் மணி, நீலகண்டன், முரளி ஆகியோர் மக்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறினர்.
 


Page 73 of 390