Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புள்ளம்பாடியில் குடிநீர் பணிகளை அதிகாரி ஆய்வு

Print PDF
தினகரன்      28.03.2013

புள்ளம்பாடியில் குடிநீர் பணிகளை அதிகாரி ஆய்வு


லால்குடி: புள்ளம் பாடி பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் நடை பெற்று வரும் குடிநீர் பணி களை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.

லால்குடி அடுத்த புள்ளம்பாடி பேரூராட்சியில் வறட்சி நிவாரணநிதி திட்டத்தின் கீழ் குடிநீர் பற்றாகுறையை போக்கும் வகையில் வார்டு எண்1,8, 14ல் அமைக்கபட்டுள்ள மினிபவர் பம்பு மற்றும் இந்தியா மார்க்2 கைப்பம்புகள் பணிகளை மாநில பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மண்டல பேரூராட்சிகளின் இயக்குனர் மார்க்கிரேட் சுசிலா, உதவி செயற்பொறியாளர் பாலகங்காதரன், பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ், செயல்அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் தமிழ்செல்வி, இளநிலை அலுவலர்கள் பிரகந்தநாயகி, பாலசுப்ரமணியன் உடனிருந்தனர்.
 

குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

Print PDF
தினகரன்     27.03.2013

குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு


திருச்சி: திருச்சியில் கோடையை சமாளிக்க குடிநீர் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

திருச்சி மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக ரூ.221.42 கோடி மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோடை காலம் நெருங்குவதால் இந்த திட்டத்தை விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா உள்ளிட்டோர் குடிநீர் திட்டப்பணிகளை நேற்று ஆய்வு செய்தனர். கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணறுகள், நீர் சேமிப்பு கிணறுகள், அம்மா மண்டபம், காவிரிப் பாலம், அரியமங்கலம், மேல கல்கண்டார் கோட்டை, பொன்மலைப்பட்டி போன்ற இடங்களில் குடிநீர் கொண்டு செல்லப்படும் பிரதான குழாய்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு கொள்ளிடத்திலிருந்து பரிசோதனை முறையில் நீரேற்றும் பணி நிலவரத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் இந்த பணிகளை மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வின்போது, மாநகர பொறியாளர் ராஜாமுகமது, நிர்வாக பொறியாளர்கள் சந்திரன், அருணாச்சலம், உதவி செயற் பொறியாளர்கள் நாகேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
 

அதிகாரிகளின் குடிநீர் வினியோக தகவலில்... முரண்பாடு ராமநாதபுரத்தில் தட்டுப்பாடு ஆரம்பம்

Print PDF
தினமலர்        26.03.2013

அதிகாரிகளின் குடிநீர் வினியோக தகவலில்... முரண்பாடு ராமநாதபுரத்தில் தட்டுப்பாடு ஆரம்பம்


ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படும் அளவீடுகளில், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி அதிகாரிகள் முரண்பாடான தகவல்களை தெரிவிக்கின்றனர். ஆனால் சப்ளையில் பெரும் குளறுபடி நிலவுகிறது. சில பகுதிகளுக்கு பல நாட்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளதை, கண்டுகொள்ளப்படாமல் உள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் அதிகரித்துள்ள மின்வெட்டால், குடிநீர் சப்ளையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது வார்டில் வடக்கு தெரு மற்றும் மதுரை ரோட்டில் உள்ள பகுதிகளில், 15 தினங்களுக்கும் மேலாக குடிநீர் வராததால், மக்கள் லாரி தண்ணீரை எதிர்பார்த்துள்ளனர்.குடிநீர் சரியாக வராதது குறித்து புகார் தெரிவித்தால், நகராட்சியினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் மீதும், குடிநீர் வடிகால் வாரியத்தினர், நகராட்சி மீதும் குறை கூறுகின்றனர்.

ராமநாதபுரம் குடிநீர் வடிகால்வாரிய உதவி பொறியாளர் கூறியதாவது:

ராமநாதபுரம் நகராட்சிக்கு முன்பு தினமும், 34 லட்சம் லிட்டர் குடிநீரை, மேல்நிலை தொட்டியில் ஏற்றினோம். தற்போது மின்தட்டுப்பாடு காரணமாக, தினமும் 30 லட்சம் லிட்டர் வழங்குகிறோம். குடிநீர் வினியோகம் நகராட்சியின் பணி என்பதால் அதில் ஏற்படும் தவறு குறித்து தெரியாது, என்றார்.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சில நாட்களாக, 28 லட்சம் லிட்டரை தான், வடிகால் வாரியம் சப்ளை செய்கிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் அதிகமாக இருப்பதால், சப்ளையில் போதிய அழுத்தம் இன்றி, சில பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில்லை. இரண்டாவது வார்டு மேடான பகுதி. அங்கு விரைவில் புதிய குழாய் அமைக்கப்படும். ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை குடியிருப்பு பகுதிகளில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
 


Page 75 of 390