Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

Print PDF
தினகரன்                       23.03.2013

திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு


திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வும் காணும் வகையில் மூலக் கரை பகுதியில் அமைக்கப்பட்ட பம்பிங் ஸ்டேஷனில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் பணிகள் துவங்கின.

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள, மதுரை மாநகராட்சியின் 95, 96, 97, 98, 99 ஆகிய ஐந்து வார்டுகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி யது. மதுரை அரசரடியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து லாரிகள் மூலம் இந்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் வீண் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

இதையடுத்து, நிரந்தர தீர்வாக, பசுமலை மூலக் கரை பகுதியில் உள்ள உந்து நிலையம், ரூ.10 லட்சம் செலவில் தற்போது நீரேற்று நிலையமாக (பம்பிங் ஸ்டேஷன்) மாற்றப்பட்டுள்ளது. தென்கால் கண்மாய் மற்றும் மாடக்குளம் கண்மாய்களில் போடப்பட்டிருந்த போர்வெல்கள் சீரமைக்கப்பட்டு, இங்கிருந்து இரு லாரிகள் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
இதனால், வீண் தாமதம், அலைச்சல்கள் தவிர்க்கப்படும். இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா துவக்கி வைத் தார். மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், உதவி இன்ஜினியர்கள் தேவதாஸ், திருஞானம், ஜெயசீலன், குழந்தைவேலு, முருகன் மற்றும் கவுன்சிலர்கள் முத்துக்குமார், ஹமீதா பேகம் அக்பர்அலி, சந்தியா பலராமன், நாகலட்சுமி பாண்டுரங்கன், நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ் கலந்து கொண்டனர்.
Last Updated on Monday, 25 March 2013 07:40
 

23 ஆண்டுகளுக்கு பிறகு கூடலூர் குடிநீர் திட்ட தடுப்பணை சீரமைப்பு

Print PDF

தினத்தந்தி                22.03.2013

23 ஆண்டுகளுக்கு பிறகு கூடலூர் குடிநீர் திட்ட தடுப்பணை சீரமைப்பு

23 ஆண்டுகளுக்கு பிறகு கூடலூர் ஹெலன் குடிநீர் திட்ட தடுப்பணை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடுக்கு தீர்வு ஏற்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர்.

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு

கூடலூர் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ள நிலையில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் கூடலூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது. இதனால் ஓவேலி ஹெலன் பகுதியில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

கடந்த 1989– 1990–ம் ஆண்டில் ஓவேலி ஆத்தூர் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டன.அங்கிருந்து குழாய் மூலம் கூடலூர் நகருக்கு குடிநீர் இதுவரை கொண்டு செல்லப் பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டு தோறும் கோடை காலத்தின்போது குடிநீர் பிரச்சினை விசுவரூபம் எடுக்கும். இதன் காரணமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

23 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைப்பு

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் குடிநீர் பிரச்சினை எழும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் ஓவேலி ஆத்தூர் பகுதியில் உள்ள குடிநீர் திட்ட தடுப்பணை பல ஆண்டுகளாக உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருந்தன. இதன் காரணமாக கூடலூர் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்வதிலும் பிரச்சினை எழுந்தது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்லும் இடம் என்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. தற்போது கோடை காலம் நிலவுவதால் தடுப்பணையில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.

இதையொட்டி கூடலூர் நகராட்சி கமிஷனர் மணி உத்தர வின் பேரில்  ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கூடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடிய ஓவேலி ஆத்தூர் தடுப்பணையை சீரமைக்கும் பணி கடந்த 5 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணியில் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், குடிநீர் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

இதுகுறித்து கூடலூர் நகராட்சி கமிஷனர் மணி, பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் கூறியதாவது:– கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு ஓவேலி ஆத்தூர் தடுப்பணையை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் பணிகள் மேற்கொள்ள முடியாது. மேலும் தடுப்பணையை சீரமைத்து உள்ளதால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்து விடும். அதுவரை குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு நகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதனை பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

குடிநீர் கட்டண நிலுவையை செலுத்தினால் 30% தள்ளுபடி

Print PDF
தினமணி           22.03.2013

குடிநீர் கட்டண நிலுவையை செலுத்தினால் 30% தள்ளுபடி

குடிநீர் கட்டண நிலுவையை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு, கட்டணத்தில் 30% தள்ளுபடி அளிக்கப்படும் என்று முதல்வரும், தில்லி ஜல போர்டு தலைவருமான ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தில்லி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: தில்லி ஜல போர்டில் பல்வேறு தகவல்கள் ஆன்லைனுக்கு (நியூ ரெவின்யூ மேனேஜ்மன்ட் சிஸ்டம்) மாற்றப்பட்டு வருகின்றன. அதனால், குடிநீர்க் கட்டணத்தைக் கணக்கிடுவதில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. அதை சரி செய்யும் வகையில், குடிநீர் நிலுவைக் கட்டணத்தில் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. நிலுவைக் கட்டணத்தை ஆறு தவணைகளில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்தலாம்.

தாமதாகச் செலுத்தப்படுவதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த தவணை முறை வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. மறுகுடியமர்த்தப்பட்ட காலனிகளுக்கும், ஜே.ஜே. காலனிகளுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.

தாமதமாகச் செலுத்தப்படும் குடிநீர்க் கட்டணத்துக்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம்  ஜே.ஜே., மறு குடியமர்த்தப்பட்ட காலனிகள் உள்ள பகுதிகளில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த காலனிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வாரியாகக் குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டு, குடிநீர் கட்டணம் கணக்கிடப்படும்.

குடிநீர்க் கட்டணத்தை அளவிட அனைவரும் குடிநீர் கட்டண மீட்டரை பொருத்த வேண்டும். குடிநீர்க் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு 2361 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குடிநீர்க் கட்டணத்தை எளிமையாகச் செலுத்த பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஜீவன் மையங்கள், கிúஸாக் மையங்களில் குடிநீர்க் கட்டணங்களைச் செலுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளன. குடிநீர்க் கட்டணத்தைச்  செலுத்தவும், குடிநீர் இணைப்பு பெறுவதற்கும், குடிநீர் துண்டிப்புக்கு விண்ணப்பிக்கவும் ஆன் லைனில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

குடிநீர்க் கட்டணம் செலுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் எஸ்எம்எஸ் பெறும் வசதி இரு மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று ஷீலா தீட்சித் கூறினார்.

 


Page 79 of 390