Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னையை சமாளிக்க முன்னேற்பாடு

Print PDF
தினமணி         16.03.2013

குடிநீர் பிரச்னையை சமாளிக்க முன்னேற்பாடு

வேலூர், மாநகராட்சி 4-வது மண்டலத்தில் அடங்கிய வார்டுகளில் வரும் கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பழுதடைந்த ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மாநகராட்சி 4-வது மண்டலக்குழு (சேண்பாக்கம்) அலுவலகத்தில் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. மண்டல அலுவலர் கண்ணன், மேற்பார்வையாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வார்டுகளில் பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளை சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னை ஏற்படும் இடங்களில் போதுமான அளவில் வாகனங்களில் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

மண்டலத்தில் அடங்கியுள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது என்றும் உறுப்பினர்கள் குறை கூறினர்.
 

குடிநீர் எடுப்பதில் பாதிப்பு சிறுவாணி அணையில் திடீர் நிலச்சரிவு

Print PDF
தினகரன்               16.03.2013

குடிநீர் எடுப்பதில் பாதிப்பு சிறுவாணி அணையில் திடீர் நிலச்சரிவு


கோவை: சிறுவாணி அணையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் உறிஞ்சி எடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணையின் நீர்த்தேக்க பரப்பு 22.46 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர். அணை நீர்மட்டம் தரையை எட்டி விட்டது. ஆங்காங்கே குட்டை போல் தேங்கிய நீரை வாய்க்கால் வெட்டி நீரேற்று நிலையம் கொண்டு வந்து குடிநீரை உறிஞ்சி பெற முடியும். நீரேற்று நிலையத்தில் நேற்று முன் தினம் நீரை உறிஞ்சியபோது அணையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அணை நீர்தேக்கத்தில் சுமார் 100 டன் மண் மற்றும் 6 மரங்கள் சரிந்து விழுந்தது. இதனால் குடிநீரை உறிஞ்சி, சுத்திகரித்து வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மண் குவியலை அகற்றி நீர் வரும் வகையில் வாய்க்கால் அமைத்தனர். இதை தொடர்ந்து குடிநீர் தடையின்றி வினியோகம் செய்யப்பட்டது. அணையின் நீர் தேக்கத்தில் உள்ள குட்டையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியால் அணையில் உள்ள வண்டல் மண் காய்ந்து வெடிப்புடன் காணப்படுகிறது. வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள மண் ஸ்திர தன்மையை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே அணை நீர்த்தேக்க பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர். அணையின் நீர்த்தேக்கத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மண் சரியும் போது கரையோரம் உள்ள மரம், செடிகளும் நீர்த்தேக்கத்தில் விழுந்து விடும் வாய்ப்புள்ளது. வறட்சி அதிகமாகும்போது அணையின் நீர்த்தேக்க பகுதியில் மண் சரிவு அதிகமாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மண் சரிவு அபாயம் உள்ள பகுதியை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும். குட்டை போல் தேங்கியுள்ள நீரை வாய்க்கால் அமைத்து நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரவேண்டும். இதற்கு கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை ஒப்புதல் வழங்கவேண்டும் என கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெத் ஸ்டோரேஜில் குடிநீர்!

அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். கடல் மட்ட உயர அளவின் படி பார்த்தால் அணையின் உச்ச மட்டம் 878.50 மீட்டராகவும், தரை மட்டம் 863.50 மீட்டராகவும் உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 863.52 மீட்டராக இருந்தது. அணையில் 863.50 மீட்டர் வரை மட்டுமே குடிநீர் பெற முடியும். அதற்கு கீழே உள்ள குடிநீர் இறுதி கட்ட இருப்பாக (டெத் ஸ்டோரேஜ்) கருதப்படுகிறது. இந்த குடிநீர் வன விலங்குகளுக்கும், அணையின் பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்போது அணையின் 3..5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இன்று முதல் 3 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே பெற முடியும்.
 

குடிநீர்த் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா

Print PDF
தினமணி        14.03.2013

குடிநீர்த் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா


காயல்பட்டினம் நகராட்சியில் ரூ. 29.67 கோடியில் 2-வது குடிநீர்த் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். 2-வது குடிநீர்த் திட்டப் பணிக்கான அடிக்கல்லை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்துப் பேசினார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் த.மோகன் வாழ்த்திப் பேசினார்.

விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோனி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைத் தலைவர் எம்.எம்.உவைஸ், உறுப்பினர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸôஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர்களான கே.எம்.இ.நாச்சி தம்பி, ஏ.வஹீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்றார். நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் நன்றி கூறினார்.
 


Page 82 of 390