Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கீழ்குந்தா பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு

Print PDF
தினமணி           01.03.2013

குடிநீர் பிரச்னையை சமாளிக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை:  கீழ்குந்தா பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு


வரும் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது என கீழ்குந்தா பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
கீழ்குந்தா பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்குந்தா பேரூராட்சித் தலைவர் ஜெயாசந்திரன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ந.மணிகண்டன், துணைத் தலைவர் எம்.போஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மஞ்சூர் பஜார் பகுதியில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டது.
 
தற்போது கடும் வறட்சி நிலவுவதால், நீர்நிலைகள் வறண்டுவிட்டன. குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
 
குடிநீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதைத் தடுப்பது, குழாய்களில் ஏற்படும் கசிவுகளை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்வது, குடிநீரை வேறு பணிகளுக்கு பயன்படுத்து வதைத் தடுக்க தீவிரமாக கண்காணிப்பது, அது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
Last Updated on Friday, 01 March 2013 10:32
 

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: தஞ்சாவூர் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF
தினமணி           01.03.2013

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்:  தஞ்சாவூர் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சை நகரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் தலைமை வகித்தார்.

எஸ். சதாசிவம் (திமுக): நாள்தோறும் காலை 5 மணிக்கு மின் தடை செய்யப்படுவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதனால், அரை மணி நேரம் கூட வீடுகளுக்குக் குடிநீர் கிடைப்பதில்லை.

சண். ராமநாதன் (திமுக): நகரில் உள்ள 51 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. மருத்துவக் கல்லூரி சாலை விரிவாக்கப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிகமாக அதிகமாக இருக்கிறது. இந்தப் பாதிப்பு குறித்தும், அதனால், புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகவும் கடந்த கூட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டது. இப்போதே குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் கோடைகாலத்தில் இன்னும் அதிகமாகும். இதை நகராட்சி நிர்வாகம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது.

நகராட்சிப் பொறியாளர் சீனிவாசன்: வெண்ணாற்றில் கோடைகாலத்தில் தண்ணீர் வரத்து இருக்காது என்பதால் 10 மில்லியன் லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுக்க முடியாது என குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகின்றனர். எனவே, புதிய திட்டம் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. அதனால்தான் புதிய குடிநீர் திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அடுத்தக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

ஜி. பிரகாஷ் (திமுக): புதை சாக்கடைகளில் அதிக அளவில் மண் படிந்துள்ளதால், கழிவு நீரோட்டத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

தலைவர்: துப்புரவு பணிக்கு 180 பேர் வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் கூறப்பட்டுள்ளது. இப்போது, 150 பேர் பணிக்கு அனுப்புகிறார். 180 பேர் அனுப்பும்போது அவர்களில் 30 பேரை சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீர்செய்ய பயன்படுத்தப்படும். இரு நாள்களுக்குள் 180 பேரை அனுப்புவதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். அனுப்பவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

எஸ். சண்முகபிரபு (அதிமுக): நிலுவையில் உள்ள தொழில் வரி ரூ. 4.33 லட்சத்தை வசூலிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றை நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உண்மையிலேயே தொழில் வரி செலுத்த இயலாதவர்களுக்குத் தள்ளுபடி செய்வது நியாயமானது. ஆனால், அந்தப் பட்டியலில் வருமான வரி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். எனவே, வருமான வரி செலுத்துபவர்களால் தொழில் வரி செலுத்த முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஆணையர் என். ரவிச்சந்திரன்: இந்தத் தீர்மானம் தொடர்பாக மறு ஆய்வு செய்து பின்னர் மன்றத்தின் ஒப்புதலுக்குக் கொண்டு வரப்படும்.

துணைத் தலைவர் கே. மணிகண்டன்: சரபோஜி சந்தையில் கடை ஏலம் விடப்பட்ட பிரச்னையில் தவறு செய்தது அலுவலர்கள்தான். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையர்: நிர்வாகத் தரப்பில் தவறு நிகழ்ந்துள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
Last Updated on Friday, 01 March 2013 10:13
 

கோடை குடிநீர்த் தேவைக்காக ரூ. 37 கோடியில் 4,000 பணிகள்

Print PDF
தினமணி           01.03.2013

கோடை குடிநீர்த் தேவைக்காக ரூ. 37 கோடியில் 4,000 பணிகள்


திருச்சி மாவட்டத்தில் கோடையை சமாளிக்கும் வகையில், அனைத்து ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் வழக்கமான பணிகளை நிறுத்தி, குடிநீர்த் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன், ரூ. 37 கோடியில் 4000 குடிநீர்த் திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

திருச்சி மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி 44,686 ஹெக்டேரில் சாகுபடி முடிந்து, 24,818 ஹெக்டேரில் அறுவடை முடிந்துள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு உரங்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக் கடைகளிலும் இருப்பு உள்ளது.வறட்சியை சமாளிக்க கடந்த ஆண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மற்ற அனைத்துப் பணிகளையும் நிறுத்திவிட்டு குடிநீர்ப் பணிகளை மட்டும் கவனித்தோம். அதேபோல, இந்த ஆண்டும் குடிநீர்ப் பணிகளை மட்டும் தீவிரமாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரூ. 37 கோடியில் ஏறத்தாழ 4,000 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியின் தேவை குறித்து எழுதிக் கொடுத்தால், அவற்றையும் இதில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சுவை குறைந்த நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் "ஆர்ஓ' முறைப்படி தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார் ஜெயஸ்ரீ.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ச. தியாகராஜன், நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எஸ். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Friday, 01 March 2013 10:03
 


Page 86 of 390