Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை: ராணிப்பேட்டை நகர்மன்றத் தலைவர்

Print PDF
தினமணி                   28.02.2013

குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை:  ராணிப்பேட்டை நகர்மன்றத் தலைவர்

வரும் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை நகர மக்களின் தண்ணீர் பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கூறினார்.

ராணிப்பேட்டை நகர்மன்ற சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நகர்மன்றத் தலைவர் மேலும் பேசியது:

ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட 30 வார்டுகளில் உள்ள 69 ஆழ்துளைக் கிணறுகளில் 47 செயல்பாட்டில் உள்ளன. எஞ்சிய 22 ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கூடுதலாக 30 ஆழ்துளைக் கிணறுகள் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

இதன் மூலம் வரும் கோடைக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

இக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முழு முயற்சி எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையர்(பொறுப்பு) எஸ்.மணி மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
Last Updated on Friday, 01 March 2013 08:56
 

பண்ருட்டிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அமைச்சர் உறுதி

Print PDF

தினமணி                   28.02.2013

பண்ருட்டிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அமைச்சர் உறுதி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பண்ருட்டி நகரப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

பண்ருட்டி நகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:

  • கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பண்ருட்டி நகர மக்களுக்கு குடிநீர் கிடைக்க உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு மாற்று இடம் ஆய்வு செய்யப்படும். இடப்பற்றாக்குறையில் உள்ள பண்ருட்டி பஸ் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.
  • நகர அம்மா பேரவைச் செயலர் ஆர்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகரச் செயலர் டி.முருகன், அவைத் தலைவர் வி.ராஜதுரை வரவேற்றனர். நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம், முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், அம்மா பேரவை துணைச் செயலர் பி.மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர்கள் என்.செல்வம், வி.ஏ.ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலர் டாக்டர் ஆர்.கவிதா, தலைமைக் கழகப் பேச்சாளர் சோமு.மணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
  • நகர இளைஞரணி பொருளர் எஸ்.கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • பண்ருட்டி ஒன்றியம்: இதேபோல் பண்ருட்டி ஒன்றியக் கழகம் சார்பில் புறங்கனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.
  • பண்ருட்டி ஒன்றிய செயலர் என்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கி.தேவநாதன் வரவேற்றார்.
  • நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், தலைமைக் கழகப் பேச்சாளர் விஜயா தைலான் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
  • அட்மா குழுத் தலைவர் இராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், முத்தமிழ்செல்வி, புருஷேத்தமன், இந்திரா வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கிளை கழகச் செயலர் கே.ஆறுமுகம் நன்றி கூறினார்.
Last Updated on Friday, 01 March 2013 10:34
 

ஒண்டிப்புலி நீர்தேக்கத்தில் 40 அடி நீர் விருதுநகரில் குடிநீர் பிரச்னை இருக்காது

Print PDF
தினமலர்           28.02.2013

ஒண்டிப்புலி நீர்தேக்கத்தில் 40 அடி நீர் விருதுநகரில் குடிநீர் பிரச்னை இருக்காது

விருதுநகர்: "கோடை காலத்தில் விருதுநகரில் குடி தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஒண்டிப்புலி நீர்த்தேக்கத்தில், 40 அடி ஆழத்தில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்., கடைசி வரை குடிநீர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை,'' என, கமிஷனர் கூறினார்.

விருதுநகர் நகராட்சி பகுதியில் 72 ஆயிரத்து 144 பேர் வசிக்கின்றனர். ஒருவருக்கு தினம் 90 லிட்டர் வீதம், 65 லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 25 லட்சம் லிட்டர், ஆனைக்குட்டம், கார்சேரி கல் குவாரி மூலம் 27 லட்சம் லிட்டர் தண்ணீர், விருதுநகருக்கு தினமும் வருகிறது. இதை பம்ப் செய்து, குடிநீர் தொட்டிகளில் சேமித்து வினியோகம் செய்கின்றனர். வார்டுகளில்ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடி நீர் சப்ளை செய்யப்படுகிறது.

மேலும், விருதுநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, 85 அடி ஆழம் கொண்ட ஒண்டிப்புலி நீர்த்தேக்கத்தில், மழை நீரும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 40 அடி ஆழம் வரை தண்ணீர் கையிருப்பு உள்ளது. 45 அடி ஆழம் கொண்ட கார்சேரி கல் குவாரியில், 19 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது.

ஒண்டிப்புலி நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரால், கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை. கமிஷனர் (பொறுப்பு) சேர்மக்கனி, "விருதுநகருக்கு தினமும் 52 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒண்டிப்புலி நீர்தேக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரால், கோடை காலத்தில் ஏப்., வரை பிரச்னை வர வாய்ப்பில்லை. இதற்கிடையில் கோடை மழை பெய்தால், குடி தண்ணீர் பிரச்னையே இருக்காது,'' என்றார்.
Last Updated on Friday, 01 March 2013 08:07
 


Page 88 of 390