Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தட்டுப்பாட்டை போக்க 6 லாரிகளில் குடிநீர் :சாய ஆலைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை

Print PDF
தின மலர்                26.02.2013

தட்டுப்பாட்டை போக்க 6 லாரிகளில் குடிநீர் :சாய ஆலைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை


ஈரோடு: குடிநீர் தட்டுபாட்டுக்கு மாற்றாக, நான்கு மண்டலங்களில் ஆறு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தேவை உள்ள பகுதிக்கு ஃபோன் செய்தால் குடிநீர் லாரிகள் வரும், என மாநகராட்சி அறிவித்துள்ளது.ஈரோடு மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு தினமும் காவிரி ஆற்றில் இருந்து, 5.40 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மின்தடை, நீர் பற்றாக்குறை, விநியோக பிரச்னையால் தற்போது, மூன்று முதல் சில இடங்களில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.காவிரி ஆற்றில் நீர் இன்றி தற்போது சாயக்கழிவுகள் மட்டுமே தேங்கி உள்ளதால், கலங்கிய நீரையே மக்கள் குடிக்கின்றனர்.

கடுங்கோடை துவங்க உள்ளதால், குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். தட்டுப்பாட்டை போக்க, மாநகராட்சியின் நான்கு மண்டலத்துக்கும் தலா ஒரு லாரியும், அதிக தட்டுப்பாடு உள்ள பகுதிக்காக இரண்டு லாரியும் ஒதுக்கப்பட்டு, சப்ளை செய்யப்படுகிறது.மாநகராட்சியோடு இணைந்த நகராட்சிகளான சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளான சூரியம்பாளையம், பெரிய அக்ரஹாரம், மற்றும் பஞ்சாயத்துகளான கந்தம்பாளையம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது.தற்போது வழங்கப்படும் குடிநீர் முழுவதும் சாய நெடி, மஞ்சள் நிறமாக உள்ளதால், மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். மாநகராட்சி வழங்கும் குடிநீரில் சாயக்கழிவு கலப்பதை, நேரடியாக மாநகராட்சி நிர்வாகமே தலையிட்டு நடவடிக்கை எடுக்காத வரை இதற்கு தீர்வு காண முடியாது.

சுத்தமான பாதுகாப்பான குடிநீர் வழங்க, 423 கோடி ரூபாய் செலவில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என மாநகராட்சி எதிர்பார்த்துள்ளது. ஆனால், இத்திட்டத்தில் தற்போது எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால், லாரிகள் மூலம் தீர்வு காண முயல்கிறது.இதுகுறித்து துணை மேயர் பழனிசாமி கூறியதாவது:

மாநகராட்சி குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து, 5.40 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

ஆனால், மாநகராட்சியின் வளர்ச்சி, விஸ்தரிப்பு, மக்கள் தொகைப்படி, 6.70 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக தேவைப்படுகிறது.இருந்தும், பிரச்னை இன்றி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அவசரம் கருதி ஆறு லாரிகள் மூலம் தட்டுப்பாடு மிகுந்த பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்கிறோம். குடிநீர் தேவை அதிகமுள்ள பகுதியினர், ஃபோன் செய்தால் லாரி மூலம் குடிநீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் சாயக்கழிவை கலக்கும் சாய ஆலைகள் மீது மாநகராட்சியே நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. கடந்த இரண்டு நாளுக்கு முன் காவிரியில் அலசப்பட்ட சாயத்துணிகளை பறிமுதல் செய்துள்ளோம். மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கடும் விளைவுகளை சாய ஆலைகள் சந்திக்க வேண்டியது வரும். குடிநீரில் சாயக்கழிவுகளை கலப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:31
 

பாகுபாடின்றி குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை

Print PDF
தின மலர்                26.02.2013

பாகுபாடின்றி குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை

பாகுபாடு இல்லாமல், அத்திக்கடவு குடிநீர் இணைப்பு வழங்க, நீலம்பூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சூலூர் அடுத்த நீலம்பூர் ஊராட்சியில் நீலம்பூர், வெங்கிட்டாபுரம், குளத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீருக்கான வீட்டு இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீலம்பூரை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து ஊராட்சி உறுப்பினர் துரை உள்ளிட்ட உறுப்பினர்கள் கூறியதாவது:

நீலம்பூர் ஊராட்சியில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக குளத்தூர் கிராமத்தில் மட்டும் அதிகளவில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே பகுதியில் மட்டும் இணைப்புகள் வழங்காமல், மற்ற பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்கவேண்டும், என, கலெக்டர் மற்றும் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. இதையடுத்து, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இரண்டு மாதத்துக்குள் நீலம்பூர் பகுதிக்கும் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்கப்படும், என ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.ஊராட்சித்தலைவர் லதா கூறுகையில்," நீலம்பூர் கிராமத்துக்கு அத்திக்கடவு குடிநீர் வழங்கும் வகையில், விளாங்குறிச்சியில் இருந்து தனி குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. பணி முடிந்ததும் வீட்டு இணைப்பு வழங்கப்படும்,' என்றார்.

Last Updated on Tuesday, 26 February 2013 11:21
 

தாமிரபரணி ஆற்று குடிநீர் கிடைக்காத பகுதியில் கோடைகால குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8 கோடியில் புதிய திட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தகவல்

Print PDF
தின மலர்                26.02.2013

தாமிரபரணி ஆற்று குடிநீர் கிடைக்காத பகுதியில் கோடைகால குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8 கோடியில் புதிய திட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தகவல்


தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் கிடைக்காத பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படும் என்பதால் முன் கூட்டியே குடிநீர் பிரச்னை வராமல் தடுக்கும் வகையில் 8 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாநில அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் 4 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாணவர்கள் மூன்று பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்கள் நேற்று கலெக்டர் ஆஷீஷ்குமாரிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது;

கோடை காலத்தில் தாமிரபரணி ஆறு மூலம் குடிநீர் பெறும் பகுதியில் குடிநீர் பிரச்னை வராது. அதே ஆற்று தண்ணீர் இல்லாத இடங்களில் குடிநீர் பிரச்னை வரக் கூடிய சூழ்நிலை உள்ளது. அந்த பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறைக்கு 8 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இன்னும் 15 நாளில் வந்துவிடும். இதன் மூலம் ஆற்று தண்ணீர் கிடைக்காத இடங்களில் புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை கூடுதலான இடங்களுக்கு விரிவாக்கம் செய்தல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.கடலோர பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் 20 அடி தோண்டினால் தண்ணீர் வந்துவிடுகிறது. ஆனால் அந்த தண்ணீர் உப்பு தண்ணீராக உள்ளது. இதனை ஆரோ பாயிண்ட் மூலம் நல்ல தண்ணீராக சுத்திகரிப்பு செய்தும் புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக கோடை காலத்திற்கு முன்பாக முடிக்கப்பட்டு விடும்.தாமிரபரணி ஆறு மூலம் குடிநீர் பெற்று வரும் மக்களுக்கு குடிநீர் பிரச்னை எதுவும் கோடை காலத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே தற்போது பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் போதுமான தண்ணீர் தேக்கப்பட்டு விட்டன.
மணிமுத்தாறு அணை தண்ணீர் முழுவதும் குடிநீர் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. இதனால் தாமிரபரணி ஆற்று தண்ணீர் சப்ளை செய்யும் பகுதியிலும் குடிநீர் பிரச்னை வராது.தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பாதை பிரச்னை சம்பந்தமாக மாநகராட்சியிடம் பேசி வருகிறோம். தற்போதுள்ள பாதை மிக முக்கியமாக பாதை என்பதால் அதனை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
 
மாநகராட்சி மேயரும் இது சம்பந்தமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரோடு ஆஸ்பத்திரிக்கு அவசியம் தேவை என்று மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளோம். மாநகராட்சி இந்த ரோட்டிற்கு பதிலாக வேறு இடம் கேட்டாலும் அதனை வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 February 2013 11:18
 


Page 90 of 390