Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு

Print PDF

தினமலர்     23.08.2012

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர், போதிய அளவு கிடைக்காததால், பொட்டிதட்டி குடிநீர் திட்டத்தை, மீண்டும் புதுப்பிக்க, நகராட்சி ஆலோசித்து வருகிறது.

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தினமும் 36 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர், வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஒரு நபருக்கு தினமும் 90 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், தட்டுப்பாடால் 65 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.காவிரி வந்தும் பல இடங்களில் கானல்நீர் தான். சில நேரங்களில் சாக்கடை கலந்து வருவதால் பல காவிரி நீரை தவிர்த்து வருகின்றனர். இதை விட ஊரணிகள், விவசாய கிணறுகளில் இருந்து லாரிகளில், தனியார் கொண்டு வரும் தண்ணீர், சுவையாக இருக்கிறது. சமையலுக்கு உகுந்த, இந்த தண்ணீரை, மக்கள் முண்டியடித்து வாங்குவது(குடம் 3 ரூபாய்) அதிகரித்து வருகிறது.

இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, போகலூர் ஒன்றியம் பொட்டிதட்டியை ஒட்டியுள்ள, வைகை ஆற்றில் இருந்து, குடிநீர் கொண்டுவர, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நகராட்சி கமிஷனர் முஜூபுர் ரஹ்மான் கூறியதாவது: 1972 முதல் ராமநாதபுரத்திற்கு பொட்டிதட்டி வைகை ஆறு தான் முக்கிய குடிநீர் ஆதார. ராமநாதபுரத்தில் இருந்து 33 கி.மீ., தொலைவிலுள்ள வழியோர கிராமங்களான சத்திரக்குடி உட்பட்ட நான்கு கிராமங்கள் பயனடைந்தன. தற்போது, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலானதால் குடிநீர் குழாய் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. சில இடங்களில் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பட்சத்தில், ராமநாதபுரத்திற்கு கூடுதலாக குடிநீர் வழங்க முடியும். காவிரி குடிநீர், பொட்டி தட்டி தண்ணீர் என தனித்தனியாக சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

 

குழாய் மூலம் குடிநீர் வினியோகம் ரத்து சேமித்து கொள்ள வாரியம் அறிவுரை

Print PDF

தினமலர்     23.08.2012

குழாய் மூலம் குடிநீர் வினியோகம் ரத்து சேமித்து கொள்ள வாரியம் அறிவுரை

சென்னை : மெட்ரோ ரயில் பணிக்காக, குடிநீர் செல்லும் பிரதான குழாய்கள் இணைப்பு பணி நடப்பதால், ஆலந்தூர், மீனம்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், நாளை, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் இருக்காது என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணிக்காக, மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, பூமிக்குள் செல்லும் குழாய்களை மாற்றி யமைத்து, ஏற்கனவே உள்ள குழாய்களுடன் இணைக்கும் பணி, நாளை (24ம் தேதி) காலை, 8 முதல், இரவு, 8 மணி வரை நடக்க உள்ளது.
இதனால், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், கே.கே.நகர், கன்டோன்மென்ட், மீனம்பாக்கம், பம்மல், முனைவர் அவென்யூ, கண்ணபிரான் கோவில் தெரு, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் பகுதிகளுக்கு, காலை 8 முதல், இரவு 8 மணி வரை, குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாது.

இப்பகுதியினர், குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவசர தேவைக்கு குடிநீர் தேவைப்பட்டால், பகுதி பொறியாளர் 12 - 81449 30912, துணை பகுதி பொறியாளர்- 81449 30262, உதவி பொறியாளர் ஆலந்தூர் - 81449 30364, உதவி பொறியாளர் லாரி வினியோகம் - 81449 30165, தலைமை அலுவலக புகார் பிரிவு, 2845 4040, 4567 4567 என்ற எண்களில், தொடர்பு கொண்டால், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 23 August 2012 09:05
 

குடிநீர் விரயம் தவிர்க்க பேரூராட்சி ஆலோசனை

Print PDF

தினமலர்              22.08.2012

குடிநீர் விரயம் தவிர்க்க பேரூராட்சி ஆலோசனை

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் விநியோகிப்படும் குடிநீரை விரயமாக்குவதையும், அதிகளவு சேகரித்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.சின்னாளபட்டிக்கு நிலக்கோட்டை பேரணையாற்றில் மற்றும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.சில ஆண்டுகள் முன்னர் வரை, கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். வாரத்திற்கு ஒருநாள் குடிநீர் விநியோகம் நடக்கும். பிளாஸ்டிக் குடங்கள்,பேரல்களில் குடிநீரை சேகரித்து வைப்பது வழக்கம். சில மாதங்களுக்கு முன்னர், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அதிகளவு நீரை பொதுமக்கள் பாத்திரங்களில் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதால், நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

தற்போது, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் நடக்கிறது.ஒருசிலர் இன்னமும் அதிகளவு நீரை சேகரித்து தேக்கி வைக்கின்றனர். பலர் விநியோகத்தின் போது, குடிநீரை செடிகளுக்கு பாய்ச்சுவது, தெருவில் தெளிப்பது, கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பேரூராட்சிஅதிகாரி ஒருவர் கூறுகையில், ""குழாய் உடைப்பு ஏற்பட்டால் தவிர குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. நீர் ஆதாரம் நல்ல நிலையில் உள்ளதால் பற்றாக்குறை ஏற்படாது. எனவே, குடிநீரை அதிகளவு சேகரித்து தேக்கி வைப்பதையும், விரயமாக்குதலையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,''என்றார்.

Last Updated on Wednesday, 22 August 2012 06:24
 


Page 100 of 390