Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிவகாசிக்கு குடகநல்லூர் குடிநீர் வழங்க ரூ24 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை

Print PDF

தினமணி   20.08.2012

சிவகாசிக்கு குடகநல்லூர் குடிநீர் வழங்க ரூ24 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை

சிவகாசி, ஆக. 19:    சிவகாசி நகருக்கு ரூ.24 கோடி மதிப்பில் குடகநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது செய்திக் குறிப்பு:

சிவகாசி நகரில் குடிநீர்த் திட்டம்-1964, சிவகாசி நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம்-1964, மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் 2006-2007 ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.

நகர குடிநீர் அபிவிருத்திக்காக குடகநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற திட்டப் பிரேரணை தயாரிக்குமாறு தனியார் நிறுவனத்திடம் 2009-ம் ஆண்டு நகராட்சி நிóர்வாக ஆணையரகம் தெரிவித்தது. இத்திட்டப் பிரேரணை தயாரிக்கப்பட்டு, இடைக்கால அறிக்கை 2010 ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனவே சிவகாசி நகர் குடிநீர் அபிவிருத்திக்கு குடகநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்குமாறு திட்ட செயலாக்கத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் குடகநல்லூரில் நான்கு கிணறுகள் அமைத்து, அதிலிருந்து தண்ணீர் எடுத்து தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்படும்.

பின்னர் நடுகலூர், சிறுக்கன்குறிச்சி, மாதவகுறிச்சி, அழகியபாண்டியபுரம், வடக்கு  செம்பட்டி, கழுகுமலை வழியே வெம்பக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து சிவகாசி நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். இதுவே குடகநல்லூர் குடிநீர் திட்டம்.

இதற்காக குழாய் அமைத்து குடிநீர் கொண்டுவர ரூ.24 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

 

ரூ.30 லட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் கலங்கல் சீரமைப்பு

Print PDF

தினமலர்             20.08.2012

ரூ.30 லட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் கலங்கல் சீரமைப்பு

 செம்பரம்பாக்கம்:சென்னைவாசிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கலங்கல் சீரமைக்கும் பணிகள் துவங்கப் பட்டு உள்ளன. பருவ மழைக்கு முன் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மொத்தம் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, 24 அடி நீர்மட்டம் கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதி பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் கருங்கற்கள் பெயர்ந்து, கலங்கல் முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்டது.ஏரியில் தற்போதுள்ள கலங்கலை அகற்றி, கான்கிரீட் மூலம் புதிய கலங்கல் அமைக்க பொதுப் பணித் துறை திட்டமிட்டது. இதற்காக 30 லட்சம் ரூபாய் செலவில் தற்போது பணிகள் துவங்கப் பட்டு உள்ளன.

பழைய கற்களை அகற்றும் பணிகள் துவங்கி உள்ளன. இரும்பு கம்பி மூலம் கான்கிரீட் தளம் அமைத்து, புதிய கலங்கல், அடுத்த மாத இறுதிக்குள் கட்டும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப் பட்டு உள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், கிருஷ்ணா நதிநீர் வருகை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்திற்கு வினாடிக்கு 259 கனஅடி அளவில் நீர்வரத்து காணப்பட்டது. ஏரியின் மொத்தம் கொள்ளளவு 1302 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்டம் 13.7 அடியாகவும் இருந்தது.கிருஷ்ணா நீர்வரத்து தொடரும் பட்சத்தில், பருவ மழைக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Monday, 20 August 2012 07:14
 

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அரும்பாவூர், பூலாம்பாடி மக்கள் பயன்பெறுவார்கள்

Print PDF

தினமணி            18.08.2012

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அரும்பாவூர், பூலாம்பாடி மக்கள் பயன்பெறுவார்கள்

பெரம்பலூர், ஆக. 17: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் மூலம் அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 525 குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் லட்சுமிபுரம், எழுமூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்களை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குன்னம் வட்டாட்சியர் அலுவலகம், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்து கேட்டறிந்த ஆட்சியர் கூறியது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 57 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில், 306 கிராமங்கள் மற்றும் அரும்பவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி பகுதிகள் பயனடையும்.

செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறுஞ்சும் நிலையத்திலிருந்து, இந்தத் திட்டத்துக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இதற்கான பணிகள் பாடாலூர் பகுதி வரை நிறைவடைந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான நீர் உந்தும் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள், குடிநீரை சரியான முறையில் பயன்படுத்துகின்றனரா என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர். ஆய்வின் போது, ஒன்றியக்குழுத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், ரா. வெண்ணிலா, கூட்டுக் குடிநீர்த் திட்ட நிர்வாக பொறியாளர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் அறிவழகன், தங்கராஜன், உதவி இயக்குநர் அவிநாசிலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 101 of 390